தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் யுவராஜா, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளாகத் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்த அவர், தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக இந்த விலகல் முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்தனை ஆண்டுகள் கட்சிக்காகத் தான் ஆற்றிய பணிகள் அனைத்தும் தனது வாழ்நாளின் மிகப்பெரிய பொக்கிஷம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் .
தனது இந்த நீண்டகால அரசியல் பயணத்தில் தனக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்து, தன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்ததற்காகத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இது தொடர்பான தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை அவர் ஜி.கே.வாசனுக்கு அனுப்பியுள்ளார் . இச்செய்தி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்திருப்பது பார்க்கப்படுகிறது. அவர் மீதான பல்வேறு…
வெறும் படிப்பால் மட்டும் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது என்பதற்கு நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற பல படிக்காத மேதைகளே…
மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டம், ஹனுமான் வார்டு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரோஜ் மெஹ்ரா. இவருக்கு ஏற்கனவே…
தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது வெடித்துள்ள குதிரை பேரப் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற…
சென்னையில் பேக்கரி தொழில் தொடங்கி சொந்தமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்க விரும்பும் நபர்களுக்காகத் தமிழக அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…