ஷாக்… உயிரை பணையம் வைத்தால் தான் ஒரு பாட்டில் தண்ணீர்… உலகின் மிக ஆபத்தான “மரணக் கடை” எங்குள்ளது தெரியுமா…?

Spread the love

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ‘ஷினியுஜாய் தேசிய புவியியல் பூங்காவில்’ தரையிலிருந்து சுமார் 393 அடி உயரத்தில், செங்குத்தான ஒரு பாறையின் மீது இந்த விசித்திரமான கடை தொங்கிக் கொண்டிருக்கிறது. வெறும் 2 சதுர மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இந்த சிறிய மரக் கேபின், உலகின் மிக ஆபத்தான பல்பொருள் அங்காடியாகக் கருதப்படுகிறது. இந்தக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்க வேண்டுமானால் சாதாரண மனிதர்களால் முடியாது; மலையேற்றக் கருவிகள், கயிறுகள் மற்றும் உலோகக் கம்பிகளின் உதவியோடு செங்குத்தான பாறையில் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி ஏறித்தான் இதனை அடைய முடியும்.

இங்கு பணிபுரியும் ஊழியர்களின் வாழ்க்கை அன்றாடம் பெரும் சவால்கள் நிறைந்தது. தினசரி சூரிய உதயத்திற்கு முன்பாகவே, மலையேறுபவர்களுக்கான தண்ணீர் பாட்டில்கள் மற்றும் திண்பண்டங்களை கனமான பைகளில் சுமந்துகொண்டு இந்த ஆபத்தான பாறையில் ஊழியர்கள் ஏறுகின்றனர். இந்தச் சிறிய கடையில் கழிப்பறை வசதி ஏதும் இல்லாததால், வேலை நேரத்தில் ஊழியர்கள் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கிறார்கள்; ஏனெனில், இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டுமென்றால் அவர்கள் மீண்டும் 393 அடி கீழே இறங்கிச் சென்றுவிட்டு, மறுபடியும் மேலே ஏறி வர வேண்டும் என்பதால் இந்த வினோத முடிவை அவர்கள் பின்பற்றுகின்றனர்.

https://www.instagram.com/p/DZ2VCdsDPYv/?utm_source=ig_web_button_share_sheet

இவ்வளவு உயரத்திற்கும் சிரமங்களுக்கும் இடையே கொண்டு செல்லப்பட்டாலும், இங்கு விற்கப்படும் பொருட்களின் விலை மிகவும் சாதாரணமாகவே வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு தண்ணீர் பாட்டில் வெறும் 2 யுவான் என்ற நியாயமான விலையிலேயே விற்கப்படுகிறது. ஒரே நேரத்தில் ஒரு நபர் மட்டுமே அமரக்கூடிய இந்தத் தனித்துவமான கடை, சில நேரங்களில் ஊழியர்கள் இல்லாதபோது முழுமையாக மக்களின் ‘நம்பிக்கை’ அடிப்படையிலும் இயங்குகிறது. அதுபோன்ற சமயங்களில் மலையேற்ற வீரர்கள் தங்களுக்குத் தேவையான தண்ணீர் அல்லது உணவை எடுத்துக்கொண்டு, அங்குள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலம் பணத்தைச் செலுத்தி விடுகின்றனர்.

Swetha

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

7 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

8 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

8 மணத்தியாலங்கள் ago