மகாசமுந்த் மாவட்டத்தைச் சேர்ந்த தீபேஷ் படேல் (35) என்பவருக்கும், தம்தரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆரம்பத்தில் இவர்களது திருமண வாழ்க்கை நன்றாகச் சென்றாலும், காலப்போக்கில் இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஜூன் 14 அன்று தீபேஷின் மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
மனைவி பிரிந்து சென்றதால் வருத்தமடைந்த தீபேஷ், அவரை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஜூன் 20 அன்று சுமார் 60 கிலோமீட்டர் தூரம் பயணித்து தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் தனது மனைவியிடம் பேசி, மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு மிகவும் கெஞ்சிக் கேட்டுள்ளார். ஆனால், கணவனுடன் மீண்டும் வாழ அவரது மனைவி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
மனைவி தன்னுடன் வர மறுத்ததால் உளைச்சலுக்கு ஆளான தீபேஷ், மாமியார் வீட்டின் அருகே இருந்த ஒரு வெற்றிலை பாக்கு கடைப் பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மகர்லோட் போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், தீபேஷுக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததாகவும், மனைவியின் நடத்தை மீது அவர் சந்தேகம் கொண்டதால் இருவருக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…