இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு முன்னால் சிறுவர் சின்னம் யாரும் நிற்காத வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வீரர்களில் பெரும்பாலானோருடன் சிறுவர்கள் நின்றிருந்த நிலையில், வைபவ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் ஆகிய இருவருக்கு முன்னால் மட்டும் சிறுவர்கள் யாரும் நிற்கவில்லை.
இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். வைபவ் சூர்யவன்ஷிக்கு தற்போது 15 வயது மட்டுமே ஆவதால், “அவரே இன்னும் ஒரு சிறுவன் தான், அதனால் தான் அவருக்கு முன்னால் மற்றொரு சிறுவனை நிறுத்தவில்லை” என்று ரசிகர்கள் பலரும் வேடிக்கையாகவும் சுவாரசியமாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DaDp2hIguI1/?utm_source=ig_web_button_share_sheet
இருப்பினும், இந்த இரண்டு வீரர்களுடன் சிறுவர்கள் ஏன் நிறுத்தப்படவில்லை என்பதற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை போட்டி அமைப்பாளர்களோ அல்லது கிரிக்கெட் வாரியங்களோ இன்னும் அறிவிக்கவில்லை. இந்த ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடும் லெவனில் சேர்க்கப்படவில்லை என்பதும், அனுபவ வீரர்களுடன் களம் இறங்க கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முடிவு செய்ததால் அவர் தனது சர்வதேச அறிமுகத்திற்காக இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…