சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள நஞ்சாங் நகரில் ஒரு அதிர்ச்சியூட்டும் பாராகிளைடிங் விபத்து ஏற்பட்டுள்ளது. வான்வழி சாகச விளையாட்டான பாராகிளைடிங்கில் ஈடுபட்டிருந்த ஒரு நபர், திடீரென வீசிய பலத்த காற்றின் காரணமாக தனது கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் அவரது பேராசூட் கயிறுகள், அங்கிருந்த கட்டுமான தளத்தின் சுமார் 200 அடி உயரமுள்ள ஒரு பிரம்மாண்டமான கோபுர கிரேனில் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த நபர் எந்தவொரு பிடிப்பும் இன்றி, தரையிலிருந்து 200 அடி உயரத்தில் காற்றில் தொங்கும் நிலை ஏற்பட்டது.
இந்த விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவசரக்கால மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மிக ஆபத்தான மற்றும் சவாலான சூழ்நிலையில் மீட்புப் பணியைத் தொடங்கினர். சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த நபர் கிரேனிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இந்த கடுமையான விபத்தில் அவர் நல்வாய்ப்பாகப் உயிர் தப்பியது பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், அந்த நபர் 200 அடி உயரத்தில் அந்தரத்தில் திக் திக் நிமிடங்களுடன் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. பேராசூட் கயிறுகள் கிரேனின் உச்சியில் சிக்கி, அந்த நபர் காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் காட்சிகளைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், இவ்வளவு உயரத்திலிருந்து அந்த நபரை சாதுரியமாக மீட்ட மீட்புக் குழுவினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…
தமிழக அரசியலில் சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.…
ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக லலித்பூரிலிருந்து குஷிபுராவில் உள்ள தனது தாய்வழி வீட்டிற்கு 24 வயதான பாலக் வந்துசேர்ந்தார். திங்கட்கிழமை…
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் விஜய்யின் தவெக வருகையும் அவர் எழுப்பும் கேள்விகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசுவது போல ஏஐ (AI) மற்றும் டீப் ஃபேக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள்…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கைலாச மானசரோவர் யாத்திரை சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் அவாரி, அவரது மனைவி…