2029-ல் விஜய்க்கு பிரதமர் நாற்காலியா?…. உண்மையைப் போட்டு உடைத்த காங்கிரஸ் எம்பி… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

Spread the love

தமிழக அரசியலில் சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் விமர்சனங்களுக்கும், தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷின் பேச்சுக்கும் விளக்கமளித்துப் பதிலளித்தார்.

சட்டமன்ற நிகழ்வுகள் பிக்பாஸ் போல் இருப்பதாக சீமான் கூறிய குற்றச்சாட்டிற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், “சீமான் பொழுதுபோக்குத் துறையில் இருந்து வந்தவர் என்பதால் எல்லாவற்றையும் பொழுதுபோக்காகப் பார்க்கிறார். அண்ணன் சீமான் எப்போதும் குறைகளை மட்டுமே சொல்வதற்காகப் பிறந்தவர்” என்று குறிப்பிட்டதுடன், வரலாற்றிலேயே முதல்முறையாகச் சட்டமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுவதை அனைவரும் வரவேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து ரீல்ஸ் மற்றும் நவீன ஊடகங்கள் குறித்துப் பேசிய அவர், “ஊடகங்களின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியே ரீல்ஸ் ஆகும். விடிய விடிய கட்சியின் பொதுக்கூட்டங்கள் நடந்த காலம் மாறி, ஒரு கருத்தை 30 நொடிகளுக்குள் சுருக்கமாகச் சொல்லும் சூழல் உருவாகியுள்ளது. ரீல்ஸாக மாறுவதற்காக சில நிகழ்வுகள் நடந்தாலும், அவை காலப்போக்கில் சரியாகிவிடும்” எனத் தெரிவித்தார்.

அடுத்ததாக, 2029-ல் விஜய்யை ராகுல் காந்தி பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார் என்ற தவெக எம்.எல்.ஏ கனிமொழியின் பேச்சு குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஜோதிடர்கள் சொல்வதையெல்லாம் பெரிதாக்கத் தேவையில்லை” என்று பதிலளித்தார். மேலும், “மாற்றத்தை விரும்பிய மக்களின் வாக்குகளால் விஜய் வென்றுள்ள நிலையில், அவர் ஊழலற்ற ஆட்சியைத் தர முயல்கிறார். ஆனால், ஊழல் செய்தவர்கள் இணைந்து அவர் செய்ய வந்த நல்ல பணிகளைச் செய்யவிடாமல் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை ராகுல் காந்திதான் நாட்டின் பிரதமர் வேட்பாளர், விஜய் முதலமைச்சராகத் தொடர்ந்து நல்லாட்சி வழங்க வேண்டும்” எனக் கூறித் தன் பேச்சை முடித்தார்.

Nanthini

Recent Posts

ஐயோ… உள்ளே குட்டி மாட்டிக்கிச்சு… 3 வயது சிறுமியை ஆழமான… இடுடுக்கில் இறக்கி நாய்க்குட்டியைக் காப்பாற்றிய… திக் திக் நிமிடங்கள்…!!

சீனாவின் காசு மாநிலம் லின்சியா நகரில் கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய மற்றும் ஆழமான இடைவெளியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டியை…

1 மணத்தியாலம் ago

ஐயோ… பணம் கொடுத்து என்னைக் சிக்கலில் மாட்டிட்டாங்க… மும்பை BKC-யில் தெலுங்கானா சுற்றுலாப் பயணி… கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது… மும்பையில் பரபரப்பு…!

மும்பை நகரில் சுற்றுலா வந்த தெலுங்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு பேரால் தாக்கப்பட்டுக் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

1 மணத்தியாலம் ago

அடச்சீ… நீங்கயெல்லாம் என்ன ஜென்மம்… நிலத் தகராறில் நடுரோட்டில்… பெற்ற தாய், தந்தையை கட்டையால்… அடித்துத் துவைத்த கொடூர மகன்கள்… புனேவில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் இந்தாபூர் பகுதியில் நிலத்தகராறு காரணமாக இரண்டு மகன்கள் தங்கள் வயதான தாய்லாந்தையும் தந்தையையும் கட்டையால்…

1 மணத்தியாலம் ago

கொஞ்சம் மிஸ் ஆனா உயிரே போயிருக்கும்…! மக்கள் கூட்டத்தில் அதிவேகமாக பைக் ஸ்டண்ட் செய்யும் வாலிபர்கள்… பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

தற்காலத்தில் சில இளைஞர்கள் இருசக்கர வாகன ஓட்டுதலை ஒரு சாதாரணப் பயணமாகப் பார்க்காமல், ஆபத்தான சாகசங்களை அரங்கேற்றும் தளமாக மாற்றிக்…

2 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… 200 வருசாமா பெண் குழந்தையே பிறக்கல… வம்சத்தின் முதல் மகளை திருவிழா மாதிரி வரவேற்ற குடும்பம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்பகுதியில்…

2 மணத்தியாலங்கள் ago

டேய்… என்னை தள்ளுரியா?… ரஷ்யக் கடையில் மனிதனையே திருப்பித் தாக்கிய… ஹூமனாய்டு ரோபோவின் வைரல் வீடியோ… நெட்டிசென்கள் ஷாக்…!

ரஷ்யாவில் உள்ள ஒரு மின்னணுப் பொருட்கள் விற்பனை நிலையத்தில், மனித உருவ ரோபோ ஒன்றை நபர் ஒருவர் தள்ளியதைத் தொடர்ந்து,…

2 மணத்தியாலங்கள் ago