அந்தரத்தில் தொங்கிய உயிர்…! 200 அடி உயரத்தில் பேராசூட் சிக்கி கொடூர விபத்து… நெஞ்சை உலுக்கும் பயங்கரம்…!!

By Swetha on ஆனி 24, 2026

Spread the love

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள நஞ்சாங் நகரில் ஒரு அதிர்ச்சியூட்டும் பாராகிளைடிங் விபத்து ஏற்பட்டுள்ளது. வான்வழி சாகச விளையாட்டான பாராகிளைடிங்கில் ஈடுபட்டிருந்த ஒரு நபர், திடீரென வீசிய பலத்த காற்றின் காரணமாக தனது கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் அவரது பேராசூட் கயிறுகள், அங்கிருந்த கட்டுமான தளத்தின் சுமார் 200 அடி உயரமுள்ள ஒரு பிரம்மாண்டமான கோபுர கிரேனில் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த நபர் எந்தவொரு பிடிப்பும் இன்றி, தரையிலிருந்து 200 அடி உயரத்தில் காற்றில் தொங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவசரக்கால மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மிக ஆபத்தான மற்றும் சவாலான சூழ்நிலையில் மீட்புப் பணியைத் தொடங்கினர். சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த நபர் கிரேனிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இந்த கடுமையான விபத்தில் அவர் நல்வாய்ப்பாகப் உயிர் தப்பியது பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது.

   

இதற்கிடையில், அந்த நபர் 200 அடி உயரத்தில் அந்தரத்தில் திக் திக் நிமிடங்களுடன் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. பேராசூட் கயிறுகள் கிரேனின் உச்சியில் சிக்கி, அந்த நபர் காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் காட்சிகளைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், இவ்வளவு உயரத்திலிருந்து அந்த நபரை சாதுரியமாக மீட்ட மீட்புக் குழுவினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.