கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பெலூர் தாலுகாவில் உள்ள கேரலூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் சைத்ரா. 33 வயதான இவர் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகள், மாமியார், மாமனாரை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது இவர் பக்கத்து வீட்டுக்காரரோடு கள்ள உறவில் இருந்தார். இதை அவருடைய குடும்பத்தார் எதிர்த்து உள்ளார்கள். இதனால் குடும்பத்தினரை தொந்தரவாக கருதி அவர்களுக்கு மெதுவாக விஷம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. சைத்ரா-கஜேந்திரா தம்பதிக்கு திருமணமாகி பத்து வருடங்கள் ஆன நிலையில் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் ஒருவரோடு கள்ள உறவில் இருந்துள்ளார் சைத்ரா. இந்த உறவு குடும்பத்தாருக்கு தெரிய வந்தபோது கணவர் சண்டையிட்டு வந்துள்ளார்.
ஆனால் சைத்ரா சமரசம் செய்து பிறகு மெல்ல மெல்ல கொல்லும் விஷத்தை கலந்து கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் கஜேந்திராவுக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உணவு விஷமாக மாறியதாக கூறியிருக்கிறார்கள். இதனால் தன்னுடைய மனைவியின் மீது சந்தேகம் அடைந்த அவர் வீட்டில் மனைவியின் பையில் இருந்த மாத்திரைகளை பற்றி சந்தேகப்பட்ட அவர் மருத்துவரிடம் காட்டிய போது அவை விஷ மாத்திரைகள் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் போலீசில் புகார் அளித்துள்ளார் கஜேந்திரா.
இதனை அடுத்து போலீஸ் விசாரணையில் சைத்ரா அந்த விஷ மாத்திரையை தினசரி உணவில் கலந்து கணவருக்கும், குழந்தைகளுக்கு, மாமியார் மற்றும் மாமனாருக்கு கொடுத்து வந்துள்ளது தெரியவந்தது. இதனால் அனைவருமே சீக்கிரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விடுவார்கள் என்று திட்டமிட்டு இருக்கிறார். இந்த விஷயத்தை உணர்ந்த கணவர் உடனடியாக மருத்துவமனையில் அனைவரையும் சேர்த்துள்ளார். மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சைத்ராவை காவல்துறையினர் கைது செய்ததுடன் கொலை முயற்சி மற்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்கிறார்கள்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில்…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் முனைப்பில் களம் கண்டுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரப்பை எட்டியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் இளைஞரணி…
திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி தான் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது போன்ற ஒரு போலியான ‘ஏஐ’ (AI)…
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…