ஈரான் கடலில் பதற்றம்… இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு?… நடுக்கடலில் ‘யூ-டர்ன்’ போட்ட 4 கப்பல்கள்…. என்ன நடந்தது…?

Spread the love

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள் உலக நாடுகளை உற்று நோக்கச் செய்துள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு ஓரளவுக்குத் தணிந்து, பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்ட நிலையில், ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதாக அறிவித்தது. இருப்பினும், இப்பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஈரான் திடீரென இந்த கடல்வழிப் பாதையை மீண்டும் மூடியதுடன், அங்கு வரும் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதற்றமான சூழலில், இந்தியாவிற்குச் சொந்தமான நான்கு பிரம்மாண்ட கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி அருகே வந்தபோது, பாதுகாப்பு கருதி திடீரென ‘யூ-டர்ன்’ அடித்துத் திரும்பியுள்ளன. இந்தியக் கப்பல் கழகத்திற்குச் சொந்தமான ‘தேஷ் வைபவ்’, ‘தேஷ் விபூர்’ மற்றும் சன்மார் ஷிப்பிங் நிறுவனத்தின் ‘சன்மார் ஹெரால்டு’ ஆகிய மூன்று கச்சா எண்ணெய் கப்பல்களும், கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் நிறுவனத்தின் ‘ஜாக் அர்னவ்’ என்ற சரக்கு கப்பலும் இதில் அடங்கும். ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலுக்கு அஞ்சி, இந்த கப்பல்கள் நடுவழியில் திரும்பியதை பிரிட்டன் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் பிரிவு (UKMTO) உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது இந்த நான்கு கப்பல்களையும் சேர்த்து, பெர்ஷியன் வளைகுடா பகுதியில் இந்தியக் கொடியுடன் நடுக்கடலில் தவிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிற்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிய கப்பல்கள் இவ்வாறு முடங்கியிருப்பது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வணிகத்தைப் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கையும், இந்தியக் கப்பல்கள் மீதான அச்சுறுத்தலும் மத்திய அரசை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

இதன் எதிரொலியாக, டெல்லியில் உள்ள ஈரான் தூதர் முகமது ஃபதாலியை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை சம்மன் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், இந்த இக்கட்டான சூழலிலும் ‘தேஷ் கரிமா’ என்ற இந்தியக் கச்சா எண்ணெய் கப்பல் மட்டும் வெற்றிகரமாக ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து ஓமன் வளைகுடாவை அடைந்துள்ளது ஆறுதல் தரும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தப் பாதையை பாதுகாப்பாகக் கடந்த 10-வது இந்தியக் கப்பல் இதுவாகும். இருப்பினும், எஞ்சியுள்ள கப்பல்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.

Nanthini

Recent Posts

“நாம் எங்கே வாழ்கிறோம்?” – பெட்ஷீட் துவைக்கப் போன புனே பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: களத்தில் இறங்கிய காவல்துறை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…

2 minutes ago

திமுகவிற்கு விழுந்த பலத்த அடி..! மொத்தமாக தவெக-வில் ஐக்கியமான 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தலைமை…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…

4 minutes ago

“நான் பேசினது தப்பு தான்” நீதிமன்ற உத்தரவை மீறிட்டேன்… பகிங்கரமாக மன்னிப்பு கேட்ட ரவிமோகன்..!!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு…

5 minutes ago

பகீர்!.. அண்ணிக்கு வந்த விபரீத கோபம்!. நாத்தனாரை தடியால் அடித்து கொன்ற கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் (Kasganj) பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணிக்கும் அவரது நாத்தனாருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண…

12 minutes ago

“சிங்கத்தின் குகைக்குள்ளேயே நுழைந்து வெற்றி” கார்ல்சனின் கோட்டையைத் தகர்த்த பிரக்ஞானந்தா… வியந்து பாராட்டிய ஆனந்த் மகிந்திரா..!!

2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது…

14 minutes ago

பயிற்சியில் பாஸ் ஆனால் மட்டுமே பதவி… நிர்வாகிகளுக்கு அண்ணாமலை போட்ட அதிரடி கண்டிஷன்.. இடைத்தேர்தலிலும் அதிரடி முடிவு..!!

திறன் பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே தனது கட்சியில் பதவி வழங்க கே. அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…

19 minutes ago