தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தற்போதே தீவிரமான களப்பணிகளைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வாய்ப்புள்ள கொளத்தூர் அல்லது அவர் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகள் மற்றும் தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்படும் முக்கியத் தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காகத் தனிப்படை அமைத்து அந்தந்தத் தொகுதிகளில் நிலவும் மக்களின் குறைகள் மற்றும் ஆளுங்கட்சியின் மீதான அதிருப்திகளைச் சேகரிக்க ரகசிய ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. முதல்வர் தொகுதியில் தவெக வலுவான வேட்பாளரை நிறுத்துவதன் மூலம், ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்து தனது அரசியல் பலத்தை நிரூபிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக பூத் கமிட்டி அமைப்பது முதல் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்ப்பது வரை களப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
திமுகவின் ஆதரவாளராக இருந்து வந்த நாஞ்சில் சம்பத் சமீபத்தில் தவெகவில் இணைந்தார். திமுகவுக்காக பல பொதுக்கூட்ட மேடையில் ஏறி பேசிய அவரை தற்போது தவெகவுக்காக பேச இறக்கிவிட விஜய் திட்டமிட்டிருக்கிறாராம். அதிலும் குறிப்பாக முதல் தொகுதியாக முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூரில் அவர் பேச நாஞ்சில் சம்பத்தே விருப்பம் காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஸ்பீச்சில் திமுகவை அவர் கடுமையாக விமர்சிக்கலாம் என்கின்றனர். திமுகவின் கோட்டையாகப் பார்க்கப்படும் தொகுதிகளில் தவெகவின் இந்தத் தீவிரத் தலையீடு, வரும் தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒரு பெரும் சவாலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும்…
தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…
பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…
சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நடிகர் விஜய்யின் தமிழக…
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தங்களது கணவர்களைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை…