கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைவதற்கு பல புதிய பயனாளிகள் விண்ணப்பித்து வரும் நிலையில், ஏற்கனவே பயனாளிகளாக இருக்கும் பெண்கள் பலர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார்? என்ற கேள்வி பலருக்கு இருக்கும். அதை தெரிந்து கொள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் பயனாளிகளாக இருக்கும் பெண்கள் அதன் விதிமுறைகளில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய, மாநில அரசு பணியில் இருப்பவர்களின் குடும்பத்தினர், ஆண்டுக்கு 2.5 லட்சம் அதிகமாக ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்பத்தினர், இந்தத் திட்டத்தில் பயனாளியாக இருக்க முடியாது.
இதன்படி பார்த்தால், கடந்த ஆண்டு டிஎன்பிசி குரூப் 2, 2A , குரூப் 4 & சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி நியமனமான வழங்கப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெற்று பணி நியமனம் ஆணைகளை பெற்றவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள், இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வந்தால், அவர்களின் பெயர்கள் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்படும். அத்தகைய பெண் பயனாளிகளின் பெயர்களை சமூக நலத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து நீக்கி உள்ளனர். எனவே இப்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் எண்ணிக்கையில் இருந்து சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…