“இனி இவங்களுக்கு மாதம் ரூ. 1000 கிடையாது….!! கலைஞர் உரிமைத் தொகையின் நியூ அப்டேட்…. ஷாக் நியூஸ்!!!

By Srimathi on புரட்டாதி 5, 2025

Spread the love

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைவதற்கு பல புதிய பயனாளிகள் விண்ணப்பித்து வரும் நிலையில், ஏற்கனவே பயனாளிகளாக இருக்கும் பெண்கள் பலர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார்? என்ற கேள்வி பலருக்கு இருக்கும். அதை தெரிந்து கொள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் பயனாளிகளாக இருக்கும் பெண்கள் அதன் விதிமுறைகளில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய, மாநில அரசு பணியில் இருப்பவர்களின் குடும்பத்தினர், ஆண்டுக்கு 2.5 லட்சம் அதிகமாக ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்பத்தினர், இந்தத் திட்டத்தில் பயனாளியாக இருக்க முடியாது.
இதன்படி பார்த்தால், கடந்த ஆண்டு டிஎன்பிசி குரூப் 2, 2A , குரூப் 4 & சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி நியமனமான வழங்கப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெற்று பணி நியமனம் ஆணைகளை பெற்றவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள், இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வந்தால், அவர்களின் பெயர்கள் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்படும். அத்தகைய பெண் பயனாளிகளின் பெயர்களை சமூக நலத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து நீக்கி உள்ளனர். எனவே இப்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் எண்ணிக்கையில் இருந்து சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது.