நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த செல்வம் (40) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற நபருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் செல்வம் மணிகண்டனுடன் தொடர்ந்து தினம் தோறும் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு வந்தார். அந்த சமயத்தில் அவர்களை விலக்கிவிட வந்த மணிகண்டனின் அண்ணன் மகனான சூர்யா (21) என்பவரை செல்வம் தகாத வார்த்தைகளால் திட்டி அவரிடம் தகராறு செய்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இருந்தாலும் தொடர்ந்து சூர்யாவுக்கும் செல்வத்துக்கும் இடையே இதை காரணமாக வைத்து அடிக்கடி சண்டை வந்துள்ளது. இப்படியான நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இருவருக்கும் இடையே நடந்து வந்த வாய் தகராறு ஒரு கட்டத்தில் கைகளப்பாக மாறியது. அப்போது அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து விளக்கி அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை இருவருக்கும் இடையே மீண்டும் வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, என் அப்பா கிட்ட பிரச்சனை பண்ணும் போது உன்னை போட்டு இருக்கணும் என்று தனது தந்தையிடம் எப்படி சண்டையிடலாம் என்று கூறி தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் செல்வத்தை சரமாரியாக வெட்டினார். இதில் செல்வத்தின் தலையில் வெட்டு காயமும் தோள்பட்டை பகுதியில் காயமும் ஏற்பட்டது. இதனால் பலத்த காயமடைந்த செல்வம் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உடனே இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூர்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். குடியிருப்பு பகுதியில் மாலை நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…