#image_title
பிரபல பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்து வரும் டிசம்பர் 22ஆம் தேதி வெங்கட சாய் என்ற தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளார். 29 வயதான இவர் ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம், காமன்வெல்த், உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடர் உள்ளிட்ட பல தொடர்களில் சாதித்துள்ளார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்திற்கு செல்கிறார. இந்த நிலையில் பி வி சிந்துவுக்கும் நடிகரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்திற்கு இருந்த நட்பு குறித்து பார்க்கலாம். அதாவது பிவி சிந்து ஒலிம்பிக்கில் சாதிப்பதற்கு முன்பாக அவருக்கும் சென்னைக்கும் ஒரு உறவு இருந்தது.
அதாவது அதற்கு காரணம் நடிகர் மற்றும் திமுக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகர்தான். ஐபிஎல் பாணியில் பேட்மிட்டனை மையமாக வைத்து இந்திய பேட்மிட்டன் என்ற தொடர் நடந்தது. இதில் சென்னை மாஸசர் அணியின் உரிமையாளர் விஜய பிரபாகர் ஏலத்தில் பிவி சிந்து வை 39 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார். அதற்கு முன்பே பிவி சிந்துவின் ஒரு ஸ்பான்சராக விஜய பிரபாகர் இருந்துள்ளார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு பி.வி சிந்துக்கும் விஜயகாந்த் குடும்பத்திற்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இன்னும் சொல்லப்போனால் நானும் ரவுடிதான் படத்தில் என்ன ஒரு ரவுடி கிட்ட கூட்டிட்டு போக முடியுமா என்று நயன்தாரா கேட்கும் வசனத்தை பிவி சிந்துவும் விஜயபிரபாகரன் இணைந்து டப்ஸ்மாஷ் செய்திருந்தார்கள். இது இணையத்தில் வைரலாகி வந்தது.
சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் விஜயகாந்த் குடும்பத்தினரோடு பிவி சிந்தும் பங்கேற்று இருந்தார். இதனால் பிவி சிந்துவும் விஜயகாந்தினுடைய மகனும் திருமணம் செய்ய போகிறார்கள் என்று அப்போதே தகவல் வந்தது. ஆனால் இதற்கு இருவருமே மறுப்பு தெரிவித்தனர். நானும் பிவி சிந்து நல்ல நண்பர்கள் தான் என்று விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூறியிருந்தார். ஆனால் இதற்கிடையில் இவர்களின் நட்பு என்ன ஆனது என்பது தெரியவில்லை. இந்த சூழலில் தான் பிவி சிந்து ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…