அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு முக்கிய சஸ்பென்ஸை உடைத்துள்ளார். விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, புதுக்கோட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் மொத்தமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக வெளியாகி வரும் தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு சற்றே யோசித்து நிதானமாகப் பதிலளித்த செங்கோட்டையன், “விஜயபாஸ்கர் எப்போது தவெகவில் இணைவார் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்” எனக் கூறி விவாதத்தை மேலும் சூடாக்கியுள்ளார். அதிமுகவின் முக்கிய முகமாக விளங்கிய ஒருவர் தனது கோட்டையோடு அப்படியே தவெகவிற்கு மாறப்போகிறார் என்ற யூகங்களுக்கு மத்தியில், மூத்த தலைவரான செங்கோட்டையனின் இந்த மர்மமான பதில், தமிழக அரசியல் களத்தில் மிகப்பாரிய திருப்புமுனைகளும் கட்சித் தாவல்களும் அரங்கேறக் கூடும் என்பதை சூசகமாக உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், த.வெ.க ஆட்சியை 'நடிகன் கட்சி' என நக்கல், நையாண்டி செய்பவர்களுக்கும்,…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், முதலமைச்சர் விஜய் தமிழக மக்களுக்கும் எதிர்க்கட்சித்…
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதிலுரையின் பேசிய முதல்வர் விஜய், தான் திரைத்துறையில் இருந்தபோது சந்தித்த அரசியல் நெருக்கடிகள் குறித்தும், தனது திரைப்படங்களுக்குக்…
"நான் ஏதோ ஷூட்டிங்ல இருந்து நேரா வந்து சி.எம். ஆன மாதிரி சில பேர் இமேஜ் கிரியேட் பண்றாங்க.. அது…
பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…
கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…