“கள்ளக்காதலனை மகிழ்விக்க காதலி செய்த காரியம்!”.. விடுதி பெண்களின் ‘அந்தரங்க வீடியோக்களை எடுத்த கொடூரம்.. யார் அந்த கொடூரன்?.. நெல்லையில் பயங்கரம்..!!

Spread the love

திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த மகரஜோதி (39) என்பவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனால் அவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்துள்ளார். அப்போது, கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓர் இளைஞருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது பின்னாளில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்த நிலையில், அந்த இளைஞர் விடுதியில் தங்கியிருக்கும் மற்ற பெண்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அனுப்புமாறு மகரஜோதியிடம் கேட்டுள்ளார்.

தனது கள்ளக்காதலனின் ஆசைக்கு இணங்கிய மகரஜோதி, விடுதியின் குளியலறை மற்றும் ஆடைகளை மாற்றும் அறை போன்ற பகுதிகளில் மறைந்திருந்து, அங்குள்ள பெண்களின் ரகசிய மற்றும் அந்தரங்கக் காட்சிகளைத் தனது செல்போனில் படம் பிடித்து அந்த இளைஞருக்கு அனுப்பி வந்துள்ளார். மகரஜோதியின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கவனித்த விடுதிப் பெண்கள், அவரை ரகசியமாகக் கண்காணித்தபோது அவர் பெண்களை வீடியோ எடுப்பதைக் கண்டும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் அவர்கள் புகார் அளிக்கவே, காப்பாளர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மகரஜோதியை அதிரடியாகக் கைது செய்து அவரிடமிருந்த செல்போனைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கோயம்புத்தூர் இளைஞரைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையிலும் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். உடன் தங்கியிருந்த பெண்ணே தங்களுக்குத் தெரியாமல் இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது விடுதிப் பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பெண்கள் விடுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா சோதனைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

18 minutes ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

43 minutes ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

1 மணத்தியாலம் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

2 மணத்தியாலங்கள் ago