“சாம்பலாக்குவோம்” என்று அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவ அமைப்பு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. கெஷ்ம் தீவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகப் பக்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஈரானின் இறையாண்மையை மீண்டும் உரசிக் பார்க்க முயன்றால், தங்களது அடுத்தகட்ட பதிலடி அனைத்துச் சட்டங்கள் மற்றும் எல்லைகளைக் கடந்து மிகவும் மோசமானதாக இருக்கும் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தங்களது பகுதியை ஆக்கிரமிக்க நினைப்பவர்கள் மற்றும் அதற்குத் துணையாக இருப்பவர்களின் தலைமையகங்களைச் சாம்பலாக்கவும் தங்களது படைகள் தயங்காது என்று ஈரான் ராணுவம் தனது அறிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் ராணுவ மோதலும், ஈரானின் இந்த அதிரடி எச்சரிக்கையும் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் போர் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது. சன் நியூஸ் ஊடகத்தின் இந்தப் பகிர்வு தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…