சட்டங்களை மதிக்க மாட்டோம்.. “சாம்பலாக்குவோம்..” அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் விடுத்துள்ள அணுஅளவு மிரட்டல்…!!

By Soundarya on ஆனி 3, 2026

Spread the love

“சாம்பலாக்குவோம்” என்று அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவ அமைப்பு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. கெஷ்ம் தீவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகப் பக்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஈரானின் இறையாண்மையை மீண்டும் உரசிக் பார்க்க முயன்றால், தங்களது அடுத்தகட்ட பதிலடி அனைத்துச் சட்டங்கள் மற்றும் எல்லைகளைக் கடந்து மிகவும் மோசமானதாக இருக்கும் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தங்களது பகுதியை ஆக்கிரமிக்க நினைப்பவர்கள் மற்றும் அதற்குத் துணையாக இருப்பவர்களின் தலைமையகங்களைச் சாம்பலாக்கவும் தங்களது படைகள் தயங்காது என்று ஈரான் ராணுவம் தனது அறிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் ராணுவ மோதலும், ஈரானின் இந்த அதிரடி எச்சரிக்கையும் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் போர் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது. சன் நியூஸ் ஊடகத்தின் இந்தப் பகிர்வு தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.