“முதல்வரே.. உங்க ஆட்களை கன்ட்ரோல் பண்ணுங்க!” TVK நிர்வாகி செய்த காரியம்.. கொதித்தெழுந்த அதிமுக..!!

Spread the love

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தென்காசி மேற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் வாசுதேவி தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு நடத்தியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு அரசுப் பொறுப்பிலும் இல்லாத தவெக மருத்துவ அணியினர், எந்த அடிப்படையில் அரசு மருத்துவமனையில் நுழைந்து ஆய்வு நடத்தலாம் என ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு தரப்பும் மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பி, தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.

இச்சம்பவம் குறித்து அதிமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகம் முழுக்க அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு என்ற பெயரில் தவெகவினர் பிஆர் ஸ்டண்ட் (PR Stunt) நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களது கட்சியின் மருத்துவ அணி என்ற பெயரில், வெள்ளை கோட் மாட்டிக்கொண்டு மருத்துவமனைகளுக்குச் சென்று அரசு மருத்துவர்களையும், செவிலியர்களையும் பணி செய்ய விடாமல் இந்த கும்பல் மிரட்டி வருகிறது. முந்தைய திமுக அரசால் மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கும் மருத்துவர்களை, தங்களின் சோஷியல் மீடியா ரீல்ஸ் கன்டென்ட்டிற்காகத் தொந்தரவு செய்வது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆய்வு நடத்த வேண்டுமானால் அதைத் துறை அமைச்சரோ அல்லது அதிகாரிகளுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினரோ செய்யட்டும் என்றும், நோயாளிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சினிமா படம் போல டாக்டர் வேஷம் போடுபவர்களைத் தவெக தலைமை அடக்கி வைக்க வேண்டும் என்றும் அதிமுக பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

அதேபோல், திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தவெக சார்பில் ஆய்வு நடத்திய இந்தப் பெண், அமைச்சரோ அல்லது சட்டமன்ற உறுப்பினரோ கிடையாது. எவ்வித அரசு பொறுப்புகளிலும் இல்லாத இவர் எந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்கிறார்? இவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் ஜோசப் விஜய், தன் கட்சி உறுப்பினர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிட அனுமதி தந்துள்ளாரா? இனி எதிர்கட்சியினரும் இது போன்ற ஆய்வுகளைச் செய்யலாமா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தச் சர்ச்சையில் சிக்கியுள்ள தவெக மருத்துவ அணி நிர்வாகி வாசுதேவி, ஏற்கனவே ‘கரூர் துயரம்’ தொடர்பான வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. கரூரில் 41 பேர் பலியானது தொடர்பாக அவதூறு பரப்பியதாக இவர் மீது முன்பே காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் பொருட்டு, அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று, தற்போது தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வரும் நிலையில், இந்த அரசு மருத்துவமனை ஆய்வுச் சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

Muthu Mani

Recent Posts

“அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்” அதிமுக பாப்புலர் முத்தையா கோரிக்கை..!!

தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…

4 மணத்தியாலங்கள் ago

“எனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் தகனம்” நான் கையெழுத்து போடல… தாயாரின் பரபரப்பு குற்றசாட்டு..!!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…

4 மணத்தியாலங்கள் ago

களத்திலேயே மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்‌ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

4 மணத்தியாலங்கள் ago

திடீர் திருப்பம்..! திமுகவில் இணையும் விசிக முன்னாள் MLA..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…

4 மணத்தியாலங்கள் ago

செங்கோட்டையன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…

4 மணத்தியாலங்கள் ago

FLASH: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு..!!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…

5 மணத்தியாலங்கள் ago