அரசியல் விமர்சகரும் மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன், ‘News focus tamil’ யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி மற்றும் அதன் அரசியல் நகர்வுகள் குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக அரசு ஆறு மாதங்களுக்கு மேல் தாங்காது என்றும், வரும் ஜனவரி மாதத்திற்குள் நீதிமன்ற வழக்குகளின் வாயிலாகவே இந்த ஆட்சியின் நிலைமை முடிவுக்கு வரக்கூடும் என்றும் தவெகவைச் சேர்ந்தவர்களே அஞ்சுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், திருமாவளவன், காங்கிரஸ், முஸ்லிம் லீக் போன்ற தலைவர்கள் எவ்வளவு ஆதரவளித்தாலும், இது மறைமுகமாக பாஜகவின் நிழல் அதிகாரத்தில் இயங்கும் அரசு என்பது விரைவில் வெளிப்பட்டுவிடும் என்றும் அவர் ஆருடம் கணித்துள்ளார்.
தவெக கொள்கை அரசியலை முற்றிலுமாக விடுத்து, குதிரை பேர அரசியலை மட்டுமே நம்பிச் செயல்படுவதாகச் சாடியுள்ள ராஜகம்பீரன், அதிமுக எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்கத் தீவிர முயற்சி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ-க்களுக்கு முதற்கட்டமாக ரூ. 25 கோடியும், தேர்தல் செலவுகளுக்காக ரூ. 35 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மதச்சார்பின்மை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் கூட தவெக தயக்கம் காட்டுவதாகவும், பெரியார் பிறந்தநாள் பேரணி மற்றும் நீட் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற காவல்துறை நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவின் திட்டமிடுதல் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே நடப்பதாகவும் சாடியுள்ளார்.
சட்டமன்றத்தில் முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்காமல், கூட்டத் தொடரின் கடைசி நாளில் தனியார் பல்கலைக்கழக மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் இந்த அரசு கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது என்று ராஜகம்பீரன் சாடியுள்ளார். 12 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் கூட பல்கலைக்கழகம் தொடங்கலாம் என்ற நிலை உருவானால், கல்வி கட்டணம் மற்றும் பாடத்திட்டம் அவர்களின் சுய கட்டுப்பாட்டிற்குள் சென்று, ஏழை எளிய மக்களுக்குக் கல்வி மீண்டும் எட்டாக்கனியாக மாறிவிடும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
விஜய்யின் கொள்கை மற்றும் நடைமுறை அரசியலுக்கு இடையே உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டிய ராஜகம்பீரன், “கடவுள் மறுப்பைத் தவிர பெரியாரின் அனைத்துக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டேன்” என்று விஜய் சொல்வது வேடிக்கையானது என்றார். விஜயின் ஆட்சி நிர்வாகமும் நடைமுறைச் செயல்பாடுகளும் பெரியாரின் வழியில் செல்லாமல், நரேந்திர மோடியின் வழியிலேயே செல்கின்றன. பெரியாருக்கும் நரேந்திர மோடிக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் என்பதால், இதில் “பெரியார் யார், மோடி யார்?” என்பதில் விஜய்க்கு ஏதேனும் குழப்பம் ஏற்பட்டுவிட்டதா என்று தெரியவில்லை என்றும் நகைச்சுவையுடன் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், ஏமாற்றுதல் மற்றும்…
மதுரையைச் சேர்ந்த தமிழக அமைச்சர்களான CTR நிர்மல் குமார், விஸ்வநாதன் இடையே உள்கட்சி பூசல் மற்றும் பனிப்போர் நிலவி வருவதாக…
\ தமிழ்நாட்டு அரசியலில் தற்போதைய கூட்டணி மாற்றங்களும், தலைவர்களின் பரஸ்பர விமர்சனங்களும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது குறித்து பிரபல…
தமிழக அரசியலில் நீண்டகாலமாக திமுக கூட்டணியில் நீடித்துவந்த மதிமுக, தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கு ஆதரவு…
தெலுங்கானா மாநிலம் கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து…
செயற்கை நுண்ணறிவு (AI) மனித சமூகத்திற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தாலும், அண்மையில் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் வெளியிட்ட ஆய்வு…