முதலிரவு அறையில் காத்திருந்த மாப்பிள்ளை… வெட்கத்தில் தாசில்தார் சந்தியா…. அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்…..!

Spread the love

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட மணமகன், முதலிரவுக்காகக் காத்திருந்த நேரத்தில் கௌரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டம் வேமுலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 41 வயதான சூரியபிரகாஷ் என்பவர், ராயவரத்தில் துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வரும் 40 வயது சந்தியாவை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்னவரம் கோயிலில் வைத்து இருவரும் தங்களது விருப்பப்படி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு சந்தியா தனது திருமணப் புகைப்படங்களைத் தனது சகோதரர்களுக்கு அலைபேசி வாயிலாக அனுப்பியுள்ளார். வேலையில்லாத ஒருவரைத் தனது தங்கை திருமணம் செய்துகொண்டதை அறிந்த சகோதரர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். எப்படியும் முதலிரவு கொண்டாட்டத்திற்காகச் சூரியபிரகாஷ் தனது வீட்டிற்கு வருவார் என்பதை அறிந்த அவர்கள், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு வீட்டின் அருகே மறைந்திருந்து காத்திருந்தனர்.

அன்றைய தினம் இரவு சுமார் 11:30 மணியளவில் சூரியபிரகாஷ் வீட்டிற்கு வந்தபோது, அங்கு மறைந்திருந்த சந்தியாவின் சகோதரர்கள் மற்றும் அவர்களது நண்பர் சேர்ந்து கற்களாலும் ஆயுதங்களாலும் அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சூரியபிரகாஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆசையாய் இல்லற வாழ்க்கையைத் தொடங்கவிருந்த மணமகன், திருமணமான இரண்டே நாட்களில் கொலை செய்யப்பட்டது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து வந்த போலீஸார் சூரியபிரகாஷின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், கொலையில் தொடர்புடைய சந்தியாவின் சகோதரர்கள் உள்ளிட்ட மூன்று பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூகத்தில் இன்னும் வேரூன்றியிருக்கும் இத்தகைய கௌரவக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே மிகுந்த கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“என்றென்றும் நீங்களே எங்கள் முதல்வர்!”… கொளத்தூர் மக்களின் சர்ப்ரைஸ் வரவேற்பு.. கண்கலங்கிய மு.க.ஸ்டாலின்…!!!

தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…

5 minutes ago

பெங்களூருவில் பயங்கரம்..! 2.5 வயது மகனை 5 லட்சத்திற்கு விற்ற தாய்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த துரோகம்…!!

பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…

6 minutes ago

“பணம் இருந்தா என்ன வேணா பண்ணலாம்” தாகத்தைத் தீர்க்க பல கோடி செலவில் ஹெலிகாப்டர்.. பனிப்பாறைத் தண்ணீரைக் குடிக்கப் பறந்த கோடீஸ்வரரின் மகள்… கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…

12 minutes ago

“ஆட்சியை கலைப்பாரா ஆளுநர்?”… சட்டசபையில் மெஜாரிட்டி இல்லைனா என்ன நடக்கும்?… விஜய் அரசுக்கு வந்த சோதனை.. சட்ட வல்லுநர்கள் சொல்லும் ரகசியம்…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நடிகர் விஜய்யின் தமிழக…

16 minutes ago

“உன் புருஷன் எனக்கு.. என் புருஷன் உனக்கு!”.. நீதிமன்றத்தையே அதிர வைத்த சகோதரிகளின் வினோத ஒப்பந்தம்… ஸ்தம்பித்த நீதிபதிகள்… வைரலாகும் குவாலியர் சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தங்களது கணவர்களைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை…

26 minutes ago

பதறவைக்கும் கொடுமை..! 12 வயது சிறுமிக்கு வளைகாப்பு… “உயிருக்கே ஆபத்து” இணையத்தை உலுக்கும் புகைப்படங்களால் கொந்தளிக்கும் மக்கள்..!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு 12 வயது சிறுமிக்கு வளைகாப்பு (Baby Shower) நடத்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும்…

29 minutes ago