“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தஸ்லீமா தனது தாய் ஆசியம்மாள் (48) வீட்டில் வசித்து வந்தார். மேலும், அவர் தனது கணவரை விவாகரத்து செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பிய அஜ்மத் உசேன், கடந்த 16-ம் தேதி இரவு அமராவதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது தஸ்லீமா பேகமும் குழந்தைகளும் வீட்டில் இல்லாத நிலையில், மாமியார் ஆசியம்மாள் மட்டும் தனியாக இருந்துள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அஜ்மத் உசேன் கோரிக்கை விடுக்க, அதற்கு ஆசியம்மாள் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அஜ்மத் உசேன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் ஆசியம்மாளைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆசியம்மாள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலையாளி அஜ்மத் உசேனைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தலைமறைவாக இருந்த அஜ்மத் உசேனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், “நான் என் மனைவியுடன் சேர்ந்து வாழவே ஆசைப்பட்டேன்; ஆனால் அதற்கு என் மாமியார் இடையூறாக இருந்தார். அவர் இருக்கும் வரை என் குடும்பம் ஒன்று சேராது என்பதால் ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்தேன்” என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

தூங்குவது போல் நடித்து அத்துமீறிய வாலிபர்.. அடுத்த நொடியே பளார் என அறைந்த பெண்.. ரயிலில் நடந்த பரபரப்பு சம்பவம்.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!!

ரயிலில் தூங்குவது போல நடித்துக்கொண்டு, அருகில் இருந்த சிறுமிக்கு/பெண்ணுக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததும், அதை உணர்ந்த அந்தப்…

2 minutes ago

கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா?…. விஜய் கொடுத்த ‘மெகா கிப்ட்’… ராகுல் காந்தி போட்ட ரகசிய ஸ்கெட்ச்… தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்காத அதிரடி ட்விஸ்ட்..!

தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, வெறும் ஐந்து மாத இடைவெளியில் இரண்டு மாநிலங்களவை (ராஜ்யசபா)…

4 minutes ago

“இந்த சிரிப்பை இனி பார்க்க முடியாது!”.. அர்ஷித்தின் துள்ளிக் குதித்த கடைசி நிமிடங்கள்.. இணையத்தை உலுக்கும் வீடியோ”..!!

மனித உருவில் வந்த அரக்கனான வளர்ப்புத் தந்தையின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, அர்ஷித் என்ற பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த…

18 minutes ago

“என்னை மன்னிச்சிருங்க அம்மா, அப்பா!”.. வினாத்தாள் கசிவால் பறிபோன 18 வயது மாணவியின் உயிர்.. இணையத்தை உலுக்கும் தற்கொலைக் கடிதம்..!!!

மத்தியப் பிரதேசத்தின் மவ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் அகான்க்சா சதுர்வேதி, ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும்…

30 minutes ago

“தம்பி, நாம தப்பிக்கிறது கஷ்டம், எங்கும் கரும்புகை” சாவுக்கு முன் வந்த கடைசி போன் கால்… டெல்லி ஹோட்டல் தீ விபத்தில் ஒரே குடும்பத்தில் 8 பேர் உட்பட 21 பேர் பலி..!!

டெல்லி மாளவியா நகரிலுள்ள 'புளோரிஷ் ஸ்டே' (Flourish Stay) என்ற விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குருகிராமைச் சேர்ந்த…

31 minutes ago

லைக்குகளுக்காக இப்படியா?.. நண்பனை உயிரோடு கொளுத்திய இளைஞன்.. இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்களில் வெறும் சில லைக்குகளுக்காகவும் (Likes), தங்களது வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்கள் பலரும்…

38 minutes ago