“மறைக்கப்பட்ட மரணம்..” வெளிவந்த வரதட்சணை கொடுமை..! ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லறையைத் தோண்டிய போலீஸ்.. பீகாரில் பயங்கரம்…!

Spread the love

பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு போலீஸார் தோண்டியெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்திப்பூர் மாவட்டம் சிங்கியா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, சுமார் 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அந்தப் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்துப் பெண்ணின் வீட்டாருக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல், கணவர் வீட்டாரே உடலை ரகசியமாக அடக்கம் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பெண்ணின் பெற்றோர் இதுகுறித்துத் தகவல் அறிந்து கேட்டபோது, அவர்கள் முறையாகப் பதிலளிக்கவில்லை.

தனது மகளை வரதட்சணைக்காகத் தூக்கிட்டுப் படுகொலை செய்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய பெற்றோர், இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் ஆரம்பத்தில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை (SP) அணுகி முறையிட்டனர். அவரது உத்தரவின் பேரில், மாஜிஸ்திரேட் முன்னிலையில், அடக்கம் செய்யப்பட்டு ஒரு மாதம் 3 நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது.

தற்போது மீட்கப்பட்ட உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றம் உறுதியானால் கணவர் வீட்டார் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். மகளைப் பறிகொடுத்து நீதிக்காக ஒரு மாதமாகப் போராடிய பெற்றோரின் நிலை அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“என் நட்பு வட்டத்தில் அவர் மட்டும்தான்!”… சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட அந்த ஒரு பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தென்னிந்தியத் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நாயகியாக வலம் வரும் த்ரிஷா, சமீபகாலமாகத் தன்னைச் சுற்றி எழும் பல்வேறு…

3 minutes ago

வெயிலின் உக்கிரம்.. “ஏசி-யே இல்லாத ஊருக்கு என்னாச்சு?.. வீட்டிற்குள்ளேயே உருகும் கிரேயான்கள்”… மிரண்டு போன மக்கள்… பெங்களூரு பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ..!!!

இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…

13 minutes ago

“வீட்டிலேயே ஒரு மினி குற்றாலம்!… இதைவிட ஒரு அழகான குளியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது!”… நெட்டிசன்களை நெகிழ வைத்த சிறுவன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…

23 minutes ago

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

37 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

38 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

40 minutes ago