இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு வைரல் வீடியோ கிளப்பியுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனர் கீதா ஸ்ரீ நாகராஜ் என்பவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், அவரது வீட்டிற்குள் மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த வண்ணக் கிரேயான்கள் (Crayons) வெப்பம் தாளாமல் உருகியிருப்பது காட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்த போதிலும், வீட்டின் உட்புறத்திலேயே ஆம்லெட் போடும் அளவிற்கு வெப்பம் நிலவுவதை தான் பார்த்ததே இல்லை என அவர் ஆச்சரியத்துடனும் கவலையுடனும் தெரிவித்துள்ளார்.
சமூவலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ, பெங்களூரு மக்களின் தற்போதைய மனநிலையைப் பிரதிபலிக்கிறது. குளிர்பதனப் பெட்டி (Fridge) தேவையற்ற நகரம் என்ற நற்பெயரை பெங்களூரு மெல்ல மெல்ல இழந்து வருவதாகப் பல பயனர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஏசி இல்லாத வீடுகள், வெப்பத்தால் தூக்கமில்லாத இரவுகள் எனத் தாங்கள் சந்திக்கும் சிரமங்களை நெட்டிசன்கள் பகிர்ந்து கொள்வதோடு, பசுமைப் போர்வை குறைந்து வருவதால் ஏற்படும் நகர்ப்புற வெப்பத் தீவு (Urban Heat Island) விளைவே இதற்கு முக்கியக் காரணம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
வேகமான நகரமயமாக்கல், கான்கிரீட் கட்டிடங்களின் அதிகரிப்பு மற்றும் மரங்கள் வெட்டப்படுவது போன்றவை பெங்களூருவின் தட்பவெப்ப நிலையைச் சிதைத்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெறும் கிரேயான்கள் உருகுவது என்பது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றினாலும், இது பருவநிலை மாற்றத்தின் அபாயகரமான அறிகுறி என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. பால்கனிகளிலும் மொட்டை மாடிகளிலும் செடிகளை வளர்ப்பது போன்ற கூட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், நகரத் திட்டமிடலில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு…
இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…
'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…
சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…