ஆதார் கார்டில் புதிய இமெயில் அப்டேட்… இனி எல்லாமே ஃப்ரீ…! எப்படி தெரியுமா…? UIDAI அதிரடி அறிவிப்பு…!!

Spread the love

இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் ஆதார் சேவை மையங்களுக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே தங்களது இமெயில் முகவரியை ‘ஆதார் செயலி’ மூலம் எளிதாகப் புதுப்பித்துக் கொள்ளும் புதிய வசதியை UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் தொடங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது மின்னஞ்சலைப் புதுப்பித்துள்ளதாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு தளங்களிலும் கிடைக்கும் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து, இமெயில் முகவரியை எளிதாக மாற்றலாம். இதற்கு முதலில் செயலியில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும். பின்னர், முகப்பு பக்கத்தில் உள்ள ‘Service’ என்ற பிரிவில் ‘Email Add/Update’ என்பதைத் தேர்வு செய்து, புதிய இமெயில் ஐடியை உள்ளிட வேண்டும். தொடர்ந்து, அந்த இமெயில் முகவரிக்கு வரும் OTP-யை பதிவிட்டு, முக அங்கீகாரத்தை முடித்தால் இமெயில் முகவரி வெற்றிகரமாக அப்டேட் செய்யப்பட்டுவிடும்.

இதற்கு முன்னதாக ஆதாரில் முகவரி, மொபைல் எண் போன்றவற்றை மாற்றுவதற்கு 75 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருந்த நிலையில், இந்த புதிய இமெயில் அப்டேட் வசதியை ஜூலை 1 முதல் முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது. பொதுமக்கள் எந்தவித கட்டணமும் இன்றி தங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே வீட்டிலிருந்தபடியே இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Swetha

Recent Posts

“வீட்ல தனியா இருக்கீங்களா”… அத்துமீறிய டெலிவரி பாய்… ஓங்கி அறைந்து வேலையை பறித்த பெண்ணின் வைரல் வீடியோ…!

மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…

3 minutes ago

“இந்தியாவை மறக்கவே முடியாது”… அமெரிக்கப் பெண் கண்ணீருடன் பதிவிட்ட வைரல் வீடியோ… ஓடி வந்த டெல்லி மாமா செய்த நெகிழ்ச்சியான காரியம்…!

அறிமுகமில்லாத ஒரு புதிய நகரத்திற்குப் பயணம் செய்யும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் யாரையும் நிலைகுலையச் செய்துவிடும். அப்படி ஒரு…

11 minutes ago

பகீர்.. ஓடும் பஸ்சில் எச்சில் துப்ப.. முயன்ற ITI மாணவர்… தலை துண்டாகி பலி…! கர்நாடகாவில் நடந்த பயங்கரம்…!

கர்நாடக மாநிலத்தில் பேருந்து ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மாணவர் ஒருவர் தலை துண்டாகி பரிதாபமாக…

11 minutes ago

மாதம் ₹20,000 வாடகை வீண் இல்லையா… இணையத்தில் தீயாய் பரவும் உபாஸ்னாவின் ‘ஸ்மார்ட்’ ஐடியா… நெட்டிசன்கள் அதிரடி விவாதம்…!

பெங்களூரைச் சேர்ந்த உபாஸ்னா டோக்ரா என்ற பெண், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு புதிய சிந்தனை தற்பொழுது இணையத்தில் பெரும் வரவேற்பைப்…

19 minutes ago

அட கடவுளே… 5 நிமிட வீடியோ கால்…! 36 லட்சத்தை பறிகொடுத்துவிட்டு… விவாகரத்து கோரும் கணவன்… நெட்டிசன்கள் அதிர்ச்சி…!!

சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியைப் போன்ற தோற்றத்தில் வந்த ஒருவரிடம் 5 நிமிட வீடியோ காலில் பேசியுள்ளார்.…

20 minutes ago

“2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்டாரா சௌந்தர்யா…? நடிகை மரணம் குறித்து இயக்குநர் சொன்ன ஷாக்கிங் தகவல்…! 22 வருசத்துக்கு அப்புறம் வெடித்த பகீர் சர்ச்சை… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!”

90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல், குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள்…

29 minutes ago