மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மாளவிகா சர்மா, தான் அறிமுகமாகும் ‘கலிஃபா’ என்ற மலையாளப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காகச் சமீபத்தில் கேரளா சென்றிருந்தார். அங்கு அவர் முதன்முறையாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, நிருபர் ஒருவர் அவரிடம் மாட்டிறைச்சி பிடிக்குமா என்று திரைப்படத்திற்குச் சற்றும் தொடர்பில்லாத ஒரு கேள்வியைக் கேட்டுத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார். எதிர்பாராத இந்தக் கேள்வியால் ஒருகணம் திகைத்துப்போன அவர், உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு தான் முழுக்க முழுக்க சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர் என்பதை மிகவும் பொறுமையாகவும் திட்டவட்டமாகவும் தெரிவித்தார்.
இந்த நேர்காணல் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. திரைப்படத்தைப் பற்றிப் பேச வந்த ஒருவரிடம், வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு இத்தகைய தேவையற்ற கேள்வியைக் கேட்ட அந்த ஊடகவியலாளரை இணையவாசிகள் கடுமையாகச் சாடி வருகின்றனர்; மேலும், மற்ற மதத்தினரிடம் இதுபோன்று கேட்பார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள மாளவிகா சர்மா, தற்போது மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகிலும் களமிறங்கியுள்ள இந்தத் தருணத்தில், கல்வியறிவில் சிறந்த மாநிலத்தில் அரங்கேறியுள்ள இந்த முகம்சுளிக்க வைக்கும் சம்பவம் பலத்த கண்டனங்களைப் பெற்றுள்ளது.
விவசாயிகளின் நலனை முதன்மையாகக் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கான தள்ளுபடி திட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி,…
பாஜகவின் அமைப்பு ரீதியான மாற்றங்களைத் தொடர்ந்து புதிய நியமனங்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டைச்…
பால்கர் மாவட்டத்தின் போய்சார் பகுதியில் உள்ள தாராபூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் 'விராஜ் ப்ரொஃபைல்ஸ்' எஃகு உற்பத்தி ஆலையில் திங்கள்கிழமை…
தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலற்ற மாநிலமாக மாற்றுவதே தனது அரசின் முதன்மை இலக்கு என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்…
மீரா ரோடு - பயந்தர் எல்லையில் உள்ள கோல்டன் நெஸ்ட் பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளில்,…
ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலனாலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…