உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சிகாரா பகுதியில் அமைந்துள்ள சஞ்சய் சிட்டி மாடல் பள்ளியில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, தரத்தரவென இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகம் மற்றும் பேருந்துடன் தொடர்புடைய நபர்களால் இந்த பெண் தாக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.
பள்ளியில் படித்து வரும் சிறு குழந்தைகளின் கண்முன்னேயே அந்தப் பெண்ணைக் கீழே தள்ளி மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுற்றிலும் பலர் நின்று கொண்டிருந்தபோதிலும், யாரும் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தவறு யார் மீது இருந்தாலும், பள்ளி வளாகத்தில் குழந்தைகள் முன்னிலையில் ஒரு பெண்ணை இவ்வாறு கொடூரமாகத் தாக்குவது ஏற்றுக் கொள்ள முடியாதது எனப் பொதுமக்கள் மற்றும் இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயிகளின் நலனை முதன்மையாகக் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கான தள்ளுபடி திட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி,…
பாஜகவின் அமைப்பு ரீதியான மாற்றங்களைத் தொடர்ந்து புதிய நியமனங்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டைச்…
பால்கர் மாவட்டத்தின் போய்சார் பகுதியில் உள்ள தாராபூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் 'விராஜ் ப்ரொஃபைல்ஸ்' எஃகு உற்பத்தி ஆலையில் திங்கள்கிழமை…
தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலற்ற மாநிலமாக மாற்றுவதே தனது அரசின் முதன்மை இலக்கு என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்…
மீரா ரோடு - பயந்தர் எல்லையில் உள்ள கோல்டன் நெஸ்ட் பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளில்,…
ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலனாலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…