கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கணவன் மற்றும் 5 வயது மகன் ஆகிய இருவர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் அபிநந்தன் மற்றும் அவரது 5 வயது மகன் எனக் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று இந்த குடும்பத்தினர் உறவினர்களின் வீட்டிற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த பிறகு, அபிநந்தனுக்கும் அவரது மனைவி ஹரிணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இரவில் இருவரும் தனித்தனி அறைகளில் தூங்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மறுநாள் காலையில் அபிநந்தன் மற்றும் அவரது 5 வயது மகன் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் வீட்டின் உள்ளேயே சடலமாகக் கிடந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மர்ம மரணம் தொடர்பாகக் கணவன் மற்றும் மகனுடன் ஒரே வீட்டில் இருந்த மனைவி ஹரிணியைச் சந்தேக வளையத்தில் கொண்டு வந்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீரா ரோடு - பயந்தர் எல்லையில் உள்ள கோல்டன் நெஸ்ட் பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளில்,…
ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலனாலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த விசிக பேனரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர்…
கிழக்கு டெல்லியின் கல்யாண்புரி பகுதியில் டெல்லி மாநகராட்சியில் (MCD) தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த அனில் (27) என்ற வாலிபர்…
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் இக்பால், தண்ணீரை விட்டு வெளியே வந்தால் உடலில்…
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மகாந்தேஷ் நகர் பிரதான சாலையில், லவ் டேல் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்த…