திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து இந்திரா காலனி பகுதியில் நேற்று அரங்கேறிய ரவுடிகளின் வெறிச்செயல் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உலுக்கியுள்ளது. மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஒன்பது பேர் கொண்ட மர்ம கும்பல், கஞ்சா போதையில் சாலையில் சென்றவர்களைக் கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, அருகில் இருந்த தேநீர் கடை ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி அந்த இடத்தையே போர்க்களமாக மாற்றினர். இந்தத் திடீர் தாக்குதலால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிய நிலையில், அந்த ரவுடி கும்பல் யாரையும் விடாமல் துரத்திச் சென்று தாக்கியது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதலில், தப்பி ஓட முடியாமல் சிக்கிய மாற்றுத்திறனாளியான ஜான் (50) மற்றும் அங்குள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்த ஒரு வடமாநிலத் தொழிலாளி என இருவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர். கஞ்சா போதையில் இருந்த ரவுடிகளின் இந்த வெறிச்செயலால் நாங்குநேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இந்த இரட்டைக் கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த ஒன்பது பேர் கொண்ட ரவுடி கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…