பெட்ரோல் குண்டு.. அரிவாள் வெட்டு.. நடுங்க வைக்கும் நாங்குநேரி சம்பவம்… சாலையில் வந்தவர்களை எல்லாம் வெட்டி சாய்த்த கொடூரம்…!

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து இந்திரா காலனி பகுதியில் நேற்று அரங்கேறிய ரவுடிகளின் வெறிச்செயல் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உலுக்கியுள்ளது. மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஒன்பது பேர் கொண்ட மர்ம கும்பல், கஞ்சா போதையில் சாலையில் சென்றவர்களைக் கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, அருகில் இருந்த தேநீர் கடை ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி அந்த இடத்தையே போர்க்களமாக மாற்றினர். இந்தத் திடீர் தாக்குதலால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிய நிலையில், அந்த ரவுடி கும்பல் யாரையும் விடாமல் துரத்திச் சென்று தாக்கியது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரத் தாக்குதலில், தப்பி ஓட முடியாமல் சிக்கிய மாற்றுத்திறனாளியான ஜான் (50) மற்றும் அங்குள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்த ஒரு வடமாநிலத் தொழிலாளி என இருவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர். கஞ்சா போதையில் இருந்த ரவுடிகளின் இந்த வெறிச்செயலால் நாங்குநேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இந்த இரட்டைக் கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த ஒன்பது பேர் கொண்ட ரவுடி கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

அப்பப்பா!… தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்… உங்களை தற்காத்துக் கொள்ள இந்த ‘5’ டிப்ஸ் போதும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…

52 minutes ago

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

1 மணத்தியாலம் ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

1 மணத்தியாலம் ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

2 மணத்தியாலங்கள் ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

2 மணத்தியாலங்கள் ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

2 மணத்தியாலங்கள் ago