“பெண் போலீசுக்கு ஆபாச மெசேஜ்.. ஸ்டேஷனுக்கே வந்த கணவர்.. துப்பாக்கி முனையில் மிரட்டிய இன்ஸ்பெக்டர் திலீபன்.. டிஐஜி எடுத்த அதிரடி முடிவு”..!!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும் பெண் காவலர் ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, பின்னர் அதை ‘டெலிட்’ செய்ததாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அந்தப் பெண் காவலர் தூத்துக்குடி மாவட்ட ‘சிங்கப்பெண் சிறப்புப்படைக்கு’ பணி மாறுதல் பெற்ற போதிலும், அவரை விடுவிக்காமல் ஆய்வாளர் திலீபன் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர், இந்த விவகாரத்தைத் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கடந்த மே 6-ஆம் தேதி காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற பெண் காவலரின் கணவர், இதுகுறித்து ஆய்வாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, காவல் நிலையத்தின் முன்பாகவே ஒருவரையொருவர் சரமாரியாக மோதிக்கொள்ளும் சூழல் உருவானது. இந்த மோதலின் போது, ஆத்திரமடைந்த ஆய்வாளர் திலீபன், பெண் காவலரின் கணவரைத் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே, ஆய்வாளர் திலீபன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “என் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை; காவல் நிலையத்திலுள்ள பெண் காவலர்களை என் பிள்ளைகளாகவே கருதுகிறேன். வேலை செய்யாதபோது சற்று கடுமையாகப் பேசியிருக்கலாமே தவிர, பாலியல் தொந்தரவு தரவில்லை, விசாரணைக்கு எனது செல்போனை ஒப்படைக்கத் தயார்” எனத் தனது தரப்பு நியாயத்தைக் கூறினார். எனினும், இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்த நெல்லை சரக டிஐஜி (பொறுப்பு) தேஷ்முக் சேகர் சஞ்சய், ஆய்வாளர் திலீபனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Muthu Mani

Recent Posts

“தடம் தெரியாமல் தரைமட்டமாக்குவோம்” – ஹெஸ்புல்லாவை முற்றிலுமாக அழிக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி உத்தரவு..!!

லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…

11 minutes ago

பழிக்குப்பழி..! அமெரிக்காவை அலறவிட்ட ஈரான் ராணுவம்.. அமெரிக்க தளத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளால் பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…

16 minutes ago

BREAKING: திருச்சி வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய்..!!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில்…

19 minutes ago

“50 காயங்கள், சிகரெட் சூடுகள்”… ஒன்றரை வயதுப் பிஞ்சு குழந்தையின் பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் அறிக்கை… தாய் மற்றும் காதலன் கைது…!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள நெடுமங்காடு பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித் தொடர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த…

24 minutes ago

“One Felt Nice, We Did It Twice” மைதானத்தில் பறக்கும் முத்தம்.. ஆர்சிபியின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடிய விராட் – அனுஷ்கா ஜோடி..!!

அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…

29 minutes ago

BREAKING: விவசாயிகள் கைது… விஜய் அரசுக்கு பெரும் பின்னடைவு…!!

கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர், திருச்சி,…

33 minutes ago