“சாலையில் தனியாக உருண்டு வந்த மனைவியின் தலை”… ரத்தம் சொட்ட அரிவாளுடன் நின்ற கணவன்…. குலை நடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்….!

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பெரியகுளம் தெருவைச் சேர்ந்தவர் 26 வயதான முத்துப்பட்டன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான சுதா என்பவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முத்துப்பட்டன் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், சுதா இல்லத்தரசியாக இருந்து குழந்தைகளைப் பராமரித்து வந்தார். இந்நிலையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் சுதாவிற்குப் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்தைத் தாண்டிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது.

முத்துப்பட்டன் வீட்டில் இல்லாத நேரங்களில் சுதா அந்த வாலிபருடன் தனிமையில் இருந்து வந்ததை அக்கம்பக்கத்தினர் கவனித்து இது குறித்து பேசி வந்தனர். இந்தத் தகவல் முத்துப்பட்டனின் காதுகளுக்கு எட்டியதை அடுத்து, அவர் மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தார். இது குறித்து மனைவியிடம் அவர் தட்டிக்கேட்டபோது, இருவருக்கும் இடையே அடிக்கடி கடுமையான வாக்குவாதங்களும் தகராறுகளும் ஏற்பட்டு வந்துள்ளன.

இந்தச் சூழலில், நேற்று காலை வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டு இரவு முத்துப்பட்டன் வீடு திரும்பியபோது, சுதா வீட்டில் இல்லை. மனைவியைத் தேடிச் சென்ற முத்துப்பட்டன், அவர் அந்த வாலிபரின் வீட்டில் இருந்து வெளியே வருவதைக் கண்டு கடும் ஆத்திரமடைந்தார். ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுதாவின் தலையைத் துண்டித்து, சாலையில் வைத்துவிட்டுச் சென்றார். இந்தச் சம்பவத்தைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

உடனடியாக இது குறித்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த சுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக முத்துப்பட்டனைக் கைது செய்துள்ள காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் அம்பாசமுத்திரம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

பகீர்… “சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம்”… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?…

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து…

12 minutes ago

ஐயோ பாவம்… சுரங்கப்பாதையில் நொறுங்கிய SUV கார்… கதறித் துடித்த பயணிகள்… காங்கிரஸ் முக்கிய புள்ளி பரிதாப பலி… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச்…

41 minutes ago

அட கொடுமையே… வாடிக்கையாளர் போல வந்து துப்பாக்கிச் சூடு… நகைக் கடையில் நடந்த பகீர் சம்பவம்… பதறவைக்கும் வீடியோ…!

பெங்களூரு அருகே தாபஸ்பேட்டையில் உள்ள 'பிரேம் சிவா ஜுவல்லரி' நகைக் கடைக்குள் புகுந்த 5 முதல் 6 பேர் கொண்ட…

48 minutes ago

ஐயோ… என் 300 ரூபாய் போச்சு… தம்பிக்குத் துணி எடுக்க முடியாதே?… கதறி அழுத பாட்டி… பேருந்துக்குள் நடந்த அந்த சம்பவம்… நெட்டிசென்களை கலங்க வைக்கும் வைரல் வீடியோ…!

ஒரு பாசமுள்ள சகோதரியின் அழுகை அங்கிருந்த மனிதர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. சகோதரனின் முகத்தைக் கடைசியாகப் பார்த்து, அவனுக்கு ஒரு…

57 minutes ago