தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்துள்ளது. விஜய்க்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கில், தனது மனுவை வாபஸ் பெற விரும்புவதாக சங்கீதா தெரிவித்ததை அடுத்து, நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கி வழக்கை தள்ளுபடி செய்தது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, சட்டசபை கூட்டத்தொடர் காரணமாக விஜய் தரப்பில் ஒத்திவைப்பு கோரப்பட்டபோதிலும், நீதிபதி சுஜாதா விசாரணையை மதியத்திற்கு ஒத்திவைத்து ஆன்லைனில் மேற்கொண்டார். அப்போது காணொளி வாயிலாக ஆஜரான சங்கீதா, சுமார் 15 நிமிடங்கள் தனது தரப்பு விளக்கத்தை முன்வைத்து வழக்கை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தார். விஜய் தரப்பு வழக்கறிஞர்களும் இதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காததால், வழக்கு முறைப்படி நிறைவுக்கு வந்தது.
கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு, தமிழக அரசியலிலும் திரைத்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 20 மற்றும் ஜூன் 15 ஆகிய தேதிகளில் முதற்கட்ட மற்றும் இரண்டாம்கட்ட விசாரணைகள் நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் இன்றைய 3-ஆம் கட்ட விசாரணையின் போது வழக்கு இந்த முக்கிய திருப்பத்தை எட்டியுள்ளது.
சங்கீதா தனது முடிவை மாற்றிக்கொண்டு வழக்கை வாபஸ் பெற்றதற்கு, விஜய்யின் தாயார் ஷோபாவின் தொடர் முயற்சியே முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. குடும்பத்தின் எதிர்காலம் மற்றும் விஜய்யின் அரசியல் பொதுவாழ்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஷோபா மேற்கொண்ட தொடர் சமரசப் பேச்சுவார்த்தைகளின் பலனாகவே இந்த பிரச்சனை சுமுக முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலங்கானா மாநிலம் ஜகித்யாலில் உள்ள காண்ட்லபல்லி மாதிரி அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி…
வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச்…
பெங்களூரு அருகே தாபஸ்பேட்டையில் உள்ள 'பிரேம் சிவா ஜுவல்லரி' நகைக் கடைக்குள் புகுந்த 5 முதல் 6 பேர் கொண்ட…
ஒரு பாசமுள்ள சகோதரியின் அழுகை அங்கிருந்த மனிதர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. சகோதரனின் முகத்தைக் கடைசியாகப் பார்த்து, அவனுக்கு ஒரு…
சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா கண்டோன்மெண்ட் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த சிவப்பு நிற…
மகாபூபாபாத் மாவட்டம் தோர்ணக்கல் மண்டலம் சிலுகோடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவருக்கும், சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பவானி என்பவருக்கும்…