சென்னையை அடுத்த கே.கே. நகரில் வசிக்கும் 8 வயது சிறுமி, பெற்றோர் பிரிந்து வாழ்வதால் தனது தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். அவ்வப்போது சிறுமியைச் சந்திக்க வரும் அவரது தாய், தான் வேலை பார்க்கும் இடத்திற்கு குழந்தையை அழைத்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில், தந்தை தனது குழந்தைகளை சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்படத்தில் நடிகர் விஜய் ‘குட் டச், பேட் டச்’ குறித்து விளக்கும் விழிப்புணர்வுக் காட்சியைப் பார்த்த அந்தச் சிறுமி, தனது தாயின் பணிவிடத்தில் பெரியன் என்ற நபர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதை உணர்ந்து, நடந்தவற்றை உடனடியாக தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
மகளின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை, இது தொடர்பாக வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிறுமியிடம் அத்துமீறிய நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு விழிப்புணர்வுக் காட்சியின் மூலம், தனக்கு நேர்ந்த அநீதியை ஒரு சிறுமி தைரியமாக வெளிப்படுத்தி குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் விழிப்புணர்வையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஜகித்யாலில் உள்ள காண்ட்லபல்லி மாதிரி அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி…
வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச்…
பெங்களூரு அருகே தாபஸ்பேட்டையில் உள்ள 'பிரேம் சிவா ஜுவல்லரி' நகைக் கடைக்குள் புகுந்த 5 முதல் 6 பேர் கொண்ட…
ஒரு பாசமுள்ள சகோதரியின் அழுகை அங்கிருந்த மனிதர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. சகோதரனின் முகத்தைக் கடைசியாகப் பார்த்து, அவனுக்கு ஒரு…
சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா கண்டோன்மெண்ட் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த சிவப்பு நிற…
மகாபூபாபாத் மாவட்டம் தோர்ணக்கல் மண்டலம் சிலுகோடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவருக்கும், சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பவானி என்பவருக்கும்…