அட கொடுமையே… வாடிக்கையாளர் போல வந்து துப்பாக்கிச் சூடு… நகைக் கடையில் நடந்த பகீர் சம்பவம்… பதறவைக்கும் வீடியோ…!

Spread the love

பெங்களூரு அருகே தாபஸ்பேட்டையில் உள்ள ‘பிரேம் சிவா ஜுவல்லரி’ நகைக் கடைக்குள் புகுந்த 5 முதல் 6 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதுடன் கடை உரிமையாளரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளது.

வாடிக்கையாளர்களைப் போல பொலேரோ காரில் வந்து இறங்கிய அக்கும்பல், நகை வாங்குவது போல் நடித்துக் கடைக்குள் நுழைந்துள்ளது. பின்னர், நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றபோது, கடையின் உரிமையாளரான புன்னாராம் அவர்களைத் தைரியமாகத் தடுத்துப் போராடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

https://twitter.com/nextminutenews7/status/2085576436140671461/video/1

காயமடைந்த உரிமையாளர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட காவல்துறையினர், கடைக்குள் இருந்து 2 தோட்டாக்களைக் கைப்பற்றியதுடன் தடயவியல் குழுவின் உதவியுடன் ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். தப்பியோடிய கொள்ளையர்களைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Swetha

Recent Posts

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

26 seconds ago

அடச்சீ… இன்சூரன்ஸ் ரூ.44 லட்சத்திற்கு ஆசைப்பட்டு… மனைவியை காரை ஏற்றி கொன்ற கணவன்… உ . பி -யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 32 வயதான ரீட்டா என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்டு…

8 minutes ago

பகீர்… “சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம்”… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?…

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து…

21 minutes ago

ஐயோ பாவம்… சுரங்கப்பாதையில் நொறுங்கிய SUV கார்… கதறித் துடித்த பயணிகள்… காங்கிரஸ் முக்கிய புள்ளி பரிதாப பலி… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச்…

49 minutes ago