மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணின் 6 வயது மகனை, அந்த நபர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியையே உறைய வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண், தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் அதற்குத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பெண்ணின் 6 வயது மகனைக் கடத்திச் சென்றுள்ளார்.
சிறுமவன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த தாய் போலீசில் புகாரளித்தார். போலீசாரின் தீவிரத் தேடுதல் வேட்டையில், ஒரு நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த நபர் சிறுவனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, உடலை டிரம்முக்குள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அந்த நபரைப் பிடிக்கப் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…