தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

Spread the love

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள வீட்டில் வைத்து, தனது தம்பியான மரிய கிளோத் மற்றும் அவரது மனைவியை மரிய வில்சன் மிகக் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மீது கொலை முயற்சி, பெண்கள் மீதான வன்கொடுமை மற்றும் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, நாளை நடக்கும் விசாரணையின் போது அமைச்சர் மரிய வில்சன் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தவெக கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

SATHISH R

Recent Posts

BREAKING: தமிழகத்தையே உலுக்கிய அதிரடி வேட்டை… ஒரே நேரத்தில் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு…!

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…

1 minute ago

“நீ செத்துப்போ.. எனக்கு அவன் தான் வேணும்”… கஞ்சா வியாபாரிக் காதலனுடன் சென்ற மகள்… ஒரே ஒரு வார்த்தையால் தாய் எடுத்த விபரீத முடிவு….!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று…

23 minutes ago

“வைகோ, திருமாவளவனுக்கு செக் வைத்த காங்கிரஸ்”… விஜய் தேர்வு செய்த ‘அந்த’ ரகசிய பெயர்… தவெக கூட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது ஆதரவு சக்திகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

29 minutes ago

11:56 மணிக்கு ஆர்டர் செய்த உணவு… வீடியோ காலில் தோழியுடன் பேசிக்கொண்டே பெண் செய்த காரியம்… நள்ளிரவில் ஹோட்டல் அறையில் நேர்ந்த கொடூரம்…!

ஹைதராபாத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

37 minutes ago

“N.ஆனந்த் Vs ஆதவ் அர்ஜுனா”… திமுக EX MLA போட்ட அந்த ஒரு குண்டு…. தவெக-வுக்குள் வெடித்த உச்சக்கட்ட மோதல்… பரபரப்பு தகவல்….!

தமிழக அரசியல் களம் ஆட்சி கவிழ்ப்பு சதி, அவதூறு பேச்சுக்கள் மற்றும் அடுத்தடுத்த கட்சித் தாவல்களால் தினந்தோறும் பரபரப்பின் உச்சத்தில்…

38 minutes ago