தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள வீட்டில் வைத்து, தனது தம்பியான மரிய கிளோத் மற்றும் அவரது மனைவியை மரிய வில்சன் மிகக் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மீது கொலை முயற்சி, பெண்கள் மீதான வன்கொடுமை மற்றும் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, நாளை நடக்கும் விசாரணையின் போது அமைச்சர் மரிய வில்சன் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தவெக கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம், நாவல்குண்ட் தாலுகாவைச் சேர்ந்த பிரியங்கா கமலாகர் (29) என்ற இளம் பெண், திருமணமாகி இரண்டே…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது ஆதரவு சக்திகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
ஹைதராபாத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழக அரசியல் களம் ஆட்சி கவிழ்ப்பு சதி, அவதூறு பேச்சுக்கள் மற்றும் அடுத்தடுத்த கட்சித் தாவல்களால் தினந்தோறும் பரபரப்பின் உச்சத்தில்…