“நீ ரொம்ப குண்டா இருக்க, உனக்கு குழந்தையே பொறக்காது”…. மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்… கொலையை மறைக்க உதவிய ஒட்டுமொத்த குடும்பம்.. அதிர்ச்சி பின்னணி…!

Spread the love

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம், நாவல்குண்ட் தாலுகாவைச் சேர்ந்த பிரியங்கா கமலாகர் (29) என்ற இளம் பெண், திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் வரதட்சணை கொடுமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த பசவராஜ் என்பவருடன் பிரியங்காவிற்குத் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பின் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினரிடையே, கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியான கருத்து வேறுபாடுகளும் குடும்பப் பிரச்சினைகளும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் குடும்பத் தகராறுகளுக்குப் பின்னணியில் கணவர் பசவராஜும் அவருடைய உறவினர்களும் பிரியங்காவைத் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வதைத்து வந்தது தெரியவந்துள்ளது. கூடுதல் வரதட்சணையாகப் பணமும் தங்க நகைகளும் கேட்டு அவர்கள் பிரியங்காவைத் துன்புறுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி, திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதைக் காரணம் காட்டி, அதற்கு பிரியங்காவின் உடல் எடை தான் காரணம் என்று கூறி அவரைத் தொடர்ந்து அவமானப்படுத்தியும், குற்றஞ்சாட்டியும் வந்துள்ளனர். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில், சம்பவத்தன்று இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பசவராஜ் தனது மனைவி பிரியங்காவைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக, பிரியங்காவின் பெற்றோருக்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். மகளின் மரண செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், பிரியங்காவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்து உடனடியாக காவல் துறையினருக்குப் புகார் அளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நாவல்குண்ட் பகுதி போலீசார், பிரியங்காவின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரியங்காவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், கணவர் பசவராஜ் மற்றும் அவரது உறவினர்கள் மூன்று பேர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் வரதட்சணைக் கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களைக் கைது செய்துள்ளனர். இந்த கொடூரக் கொலைக்குத் தொடர்ச்சியான வரதட்சணை கொடுமைகளும், உடல் எடையை வைத்து இழிவுபடுத்தியதும் தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

மரண பயம் காட்டும் CCTV காட்சி… சுங்கச்சாவடியை நொடிப் பொழுதில் சாம்பலாக்கிய கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சிஹோரி சுங்கச்சாவடி அருகே ஜூன் 26 அன்று அதிகாலை நிகழ்ந்த லாரிக்…

1 minute ago

பூமியைச் சுற்றப்போகும் 17 லட்சம் ஆபத்துகள்… விண்வெளியில் நடக்கப்போகும் ‘அந்த’ பயங்கரம்… இனி நட்சத்திரங்களை பார்க்கவே முடியாதா?… விஞ்ஞானிகள் வெளியிட்ட பகிர் அறிக்கை …!

விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு…

13 minutes ago

ஆதார் கார்டில் புதிய இமெயில் அப்டேட்… இனி எல்லாமே ஃப்ரீ…! எப்படி தெரியுமா…? UIDAI அதிரடி அறிவிப்பு…!!

இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…

21 minutes ago

“நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்!”… தன் மரணச் செய்திக்கு ‘MBA சாய்வாலா’ பிரஃபுல் பில்லோரே கொடுத்த அதிரடி பதில்…!

'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…

22 minutes ago

“ஓடும் காரில் ரொமான்ஸ்…? ரோட்டை பார்த்து ஓட்டாததால் நேர்ந்த விபரீதம்..! அரைகுறை ஆடையுடன் தம்பதி சிக்கிய வீடியோவால் இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!”

சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…

29 minutes ago