தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

By SATHISH R on ஆடி 3, 2026

Spread the love

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள வீட்டில் வைத்து, தனது தம்பியான மரிய கிளோத் மற்றும் அவரது மனைவியை மரிய வில்சன் மிகக் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மீது கொலை முயற்சி, பெண்கள் மீதான வன்கொடுமை மற்றும் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

   

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, நாளை நடக்கும் விசாரணையின் போது அமைச்சர் மரிய வில்சன் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தவெக கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.