Categories: சினிமா

ஒவ்வொரு நிகழ்விலும் உன்னத மனிதர் என்பதை நிரூபித்த எம்.ஜி.ஆர்.. நெகிழ வைக்கும் சம்பவம்

Spread the love

மூன்று வேளை உணவிற்காக நாடகத் துறையில் நுழைந்து பின் படிப்படியாக சினிமாவில் நடித்து நாட்டையே ஆண்டவர்தான் எம்.ஜி.ஆர். சிறுவயதில் தான் பட்ட கஷ்டங்கள் யாரும் படக் கூடாது என்பதற்காக தன்னை நாடி வந்தவர்களுக்கும், அரசியலில் நுழைந்து முதலமைச்சராகவும் எண்ணற்ற பல திட்டங்களைத் தீட்டி இன்றுவரை மக்களின் இதய தெய்வமாகத் திகழ்கிறார்.

அதேபோல் தான் வறுமையில் இருந்தாலும் தன்னிடம் பணம் இருக்கும் நேரத்தில் தனக்கு நெருக்கமாக பலருக்கும் உதவும் எண்ணம் கொண்டவர் எம்.ஜி.ஆர், சினிமாவில் நடிக்க தொடங்கும்போது பல தடைகள் வந்தாலும் 10 ஆண்டுகள் கழித்து அவர் நாயகனாக உருவெடுத்த போது பல தடைகள் அவரை துரத்தி வந்துள்ளது. இவற்றை எல்லாம் கடந்து எம்.ஜி.ஆர் திரைத்துறையில் தனது ஆளுமையை செலுத்தி வந்துள்ளார்.

தன்னால் முடிந்த வரைக்கும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட எம்.ஜி.ஆர் கடைசி வரைக்கும் அதேபோல் வாழ்ந்து காட்டியுள்ளார். அதேபோல் யாராக இருந்தாலும் உதவும் மனப்பான்மையுடன் பேசும் எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு தளத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 1966-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் அன்பே வா.

#image_title

திருலோகச்சந்தர் இயக்கிய இந்த படத்தில், எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதனிடையே அன்பே வா படத்தின் படப்பிடிப்பின்போது அப்படத்தின் தயாரிப்பாளராக இருந்த ஏ.வி.எம் சரவணன் தயாரிப்பு பணிகளை கவனித்து வந்துள்ளார். அப்போது சிம்லாவில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.

சிம்லாவில் கடும் குளிர் என்பதால் ஏ.வி.எம் சரவணன் சரவணனுக்கு தொண்டை வறண்டு போய் உடல் நிலை சரியில்லாமல் ஆகியுள்ளது. மேலும் கடும் குளிர் என்பதால், படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாலும் காரிலேயே முடங்கி கிடந்துள்ளார். அப்போது அவரின் நிலையை பார்த்த எம்.ஜி.ஆர் ஒரு டம்ளரில் பால் எடுத்துக்கொண்டு போய் காரில் இருந்த ஏ.வி.எம் சரவணனிடம் கொடுத்துள்ளார்.

#image_title

கலைஞர் வசனமா..? தெறித்து ஓடிய ரஜினி.. விட்டுக் கொடுத்த கருணாநிதி

இதை சற்றும் எதிர்பாராத ஏ.வி.எம் சரவணன், நீங்கள் ஏன் எடுத்துக்கொண்டு வருகிறீர்கள். வேறு யாரிடமாவது கொடுத்து அனுப்பியிருக்கலாமே என்று சொல்ல, எம்.ஜி.ஆரே வேறு யாரிடமாவது கொடுத்தால் நீங்கள் ஏதாவது சொல்லி குடிக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது. அதே நான் வந்து கொடுத்தால் கண்டிப்பாக குடிப்பீர்கள். இந்த குளிருக்கு சூடான பால் உங்கள் தொண்டைக்கு இதமாக இருக்கும் குடியுங்கள் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆரின் இந்த வார்த்தையை கேட்ட ஏ.வி.எம் சரவணன் நெகிழ்ந்து போயுள்ளார். இதன் மூலம் மற்றவர்களுக்கு உதவி மட்டுமல்ல தன்னை சுற்றியுள்ளவர்களின் உடல் நலத்திலும் எம்.ஜி.ஆர் மிகுந்த அக்கறை உடையவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

காலையிலேயே பரபரப்பு… அமித்ஷா உடன் TTV தினகரன் ரகசிய சந்திப்பு… செம ஷாக்கில் இபிஎஸ்….!

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில்…

16 minutes ago

பொங்கலுக்கு பளபளப்பான வெல்லம் வாங்குறீங்களா…? அப்போ இது உங்களுக்குத்தான்….! கலப்படத்தை கண்டறிய சூப்பர் டிப்ஸ் இதோ…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வெல்லத்தில், லாபத்திற்காகச் சுண்ணாம்பு, செயற்கை நிறங்கள் மற்றும் சோள மாவு போன்ற…

36 minutes ago

தினமும் 12 ரூபாய் போதும்.. வயசான காலத்தில் ராஜா மாதிரி வாழலாம்…!! போஸ்ட் ஆபிஸின் சூப்பர் திட்டம்…!!

குறைந்த முதலீட்டில் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘அடல் ஓய்வூதியத் திட்டம்’ தற்போது அனைத்து அஞ்சலகங்களிலும்…

42 minutes ago

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! FASTag-ல் பிப்ரவரி 1 முதல் மாறப்போகும் விதி…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் விரைவாகச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக் (FASTag) நடைமுறையில், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் முக்கியத்…

46 minutes ago

திருப்பி தரலனா போராட்டம் தான்…!! பிடிவாதம் பிடிக்கும் அரசு ஊழியர்கள்…. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்…!!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட காலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, மீண்டும் போராட்டக்…

55 minutes ago

2026-ல் குரு பகவானின் மும்முறை ஆட்டம்…. இந்த ராசிக்கு அடிக்கப்போகும் மெகா ஜாக்பாட்….! உச்ச குருவால் மாறப்போகும் தலையெழுத்து…!!

2026-ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனம், கடகம், மற்றும் சிம்மம் என மூன்று ராசிகளுக்குத் தனது இருப்பிடத்தை அதிரடியாக மாற்ற…

1 மணத்தியாலம் ago