தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் விரைவாகச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக் (FASTag) நடைமுறையில், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் முக்கியத் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. கார், ஜீப் மற்றும் வேன் போன்ற சிறிய ரக வாகன உரிமையாளர்கள் இனி தங்களது வாகன விவரங்களைச் சரிபார்க்கும் ‘KYV’ (Know Your Vehicle) எனும் நடைமுறையை மேற்கொள்ளத் தேவையில்லை.
முன்னதாக, இலகு ரக வாகனங்களுக்கான ஃபாஸ்டேக் அட்டைகளை கனரக வாகனங்களில் பயன்படுத்திச் சுங்கக் கட்டணத்தைத் திருடுவதைத் தடுக்க இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டது, ஆனால் பொதுமக்களின் சிரமத்தைக் கருதி இப்போது இது நீக்கப்பட்டுள்ளது. புதிதாக ஃபாஸ்டேக் வாங்கும் வாகனங்களுக்கும் இந்த வாகன அடையாளச் சரிபார்ப்பு இனி அவசியமில்லை என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஃபாஸ்டேக் கணக்கைத் தொடங்கும் போதே தேவையான அனைத்து அடிப்படைத் தகவல்களும் பெறப்படுவதால், தனியாக மீண்டும் ஒருமுறை விவரங்களைப் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாற்றத்தினால் சுங்கச்சாவடிகளில் நிலவும் குழப்பங்கள் குறைவதோடு, வாகன ஓட்டிகள் தேவையற்ற தொழில்நுட்பச் சிக்கல்களில் இருந்து விடுபட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…