டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குழு தலைவர் அஜீத் அகர்கர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கலந்து கொண்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் அக்சர் படேல் துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுப்பன் கில் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனைப் போலவே ஜிதேஷ் ஷர்மாவும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இஷான் கிஷன், ரிங்கு சிங் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர்
இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்ரவரி 7 ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12 ஆம் தேதி டெல்லியில் மோதுகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18 ஆம் தேதி ஆமதாபாத்தில் மோதுகிறது.
"விஜய் தவறு செய்யமாட்டான்; தவறு செய்ய அனுமதிக்கவும் மாட்டான். ஒருவேளை அப்படி யாருக்காவது எண்ணம் இருந்தால், அதை இப்போதே அழித்துவிடுங்கள்.…
"மக்களுடைய ஒரு பைசாவைக் கூட நான் தொடமாட்டேன்" என்று பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். ஊழலற்ற நேர்மையான…
"பசியின் கொடுமை என்ன என்பதை நான் நன்கு அறிவேன். நான் ஏதோ ஒரு ராஜ குடும்பத்தில் இருந்தோ அல்லது அரச…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், மக்கள் நலன் சார்ந்த அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய விஜய், மிக முக்கியமான மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டு…
தமிழகத்தின் 17-ஆவது அமைச்சரவையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏ-வுமான ஆதவ் அர்ஜுனா அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை…
தமிழக அரசியல் வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) தமிழ்நாட்டின்…