சென்னையில் உள்ள ஒரு ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக ஆண் பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து 20 நிமிடங்களுக்கும் மேலாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்ததாகக் கூறி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், குறிப்பிட்ட அந்தப் பயணி எதைப்பற்றியும் கவலைப்படாமல், கண்ணிமைக்காமல் அந்த இளைஞரையே பார்த்துக் கொண்டிருப்பது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அந்த இளைஞர், “ஒரு ஆணாக இருந்தும் அந்த நபரின் தொடர்ச்சியான பார்வை எனக்கு மிகுந்த அசௌகரியத்தையும் மன உளைச்சலையும் தந்தது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். பொதுவாகப் பொது இடங்களில் பெண்களுக்குத்தான் இதுபோன்ற சங்கடங்கள் ஏற்படும் என்ற பிம்பம் இருக்கும் நிலையில், ஒரு ஆண் பயணிக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
https://www.instagram.com/reel/DaUsJ4FE2kV/?utm_source=ig_web_button_share_sheet
இணையவாசிகளிடம் இந்த வீடியோ கலவையான கருத்துக்களைப் பெற்று வருகிறது. சிலர், பொது இடங்களில் சக மனிதர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் நிம்மதியையும் கெடுக்கும் இதுபோன்ற ‘முறைத்துப் பார்க்கும்’ கலாச்சாரம் கண்டிக்கத்தக்கது என்றும், இது ஒரு வகையான அத்துமீறல் என்றும் கூறி இளைஞருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். அதே நேரத்தில், குறிப்பிட்ட அந்தப் பயணி மனநலம் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது ஏதோவொரு சிந்தனையில் அப்படிப் பார்த்திருக்கலாம் என்றும் சிலர் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…
தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…