திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக் சுல்தான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காரில் வந்து ஆடுகளைத் திருடிச் சென்றதாக சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு வாணியம்பாடி போலீசாரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது இவருக்கே அரசு தரப்பு வழக்கறிஞர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் சட்டத்துறையினர் இடையே கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட அஞ்சலை (65) என்ற முதியவர், வாணியம்பாடி புதூர் ஏரிக்கரை பகுதியில் தனியாக வசித்து வருகிறார். கணவர் மற்றும் மகன்களை இழந்துவிட்ட நிலையில், தனது வாழ்வாதாரத்திற்காக ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். முன்பு இந்த வழக்கறிஞர் ஷேக் சுல்தானின் மாட்டுக்கொட்டகையை சுத்தம் செய்யும் வேலை செய்து வந்த அஞ்சலை, பின்னர் அந்த வேலையிலிருந்து நின்றுவிட்டார். இந்தச் சூழலில், கடந்த 2025 செப்டம்பர் மாதம் அஞ்சலையின் ஆடு ஒன்று காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் மூலம் வழக்கறிஞர் ஷேக் சுல்தான் தனது கூட்டாளியுடன் காரில் வந்து ஆட்டைத் திருடியது அம்பலமானது.
இச்சம்பவம் ஒருபுறமிருக்க, தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பதவிகளைப் பெறுவதற்கு ஆளுங்கட்சியின் வழக்கறிஞர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே, அரசு வழக்கறிஞர் நியமனங்களில் 5 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கைமாறுவதாக உட்கட்சி நிர்வாகிகள் சிலரே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊழலையும் லஞ்சத்தையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடர்ந்து முழங்கி வரும் வேளையில், இதுபோன்ற குற்றப் பின்னணி கொண்ட ஒருவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருப்பது அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தகுதியான நபர்களை ஆராய்ந்து நியமிக்காமல், முறைகேடான வழிகளில் பதவிகள் வழங்கப்படுகிறதா என்ற கேள்வியும், இத்தகைய நியமனம் சட்டத்தின் மீதான சாமானிய மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிடும் என்ற அச்சமும் தற்போது பரவலாக எழுந்துள்ளது.
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த…
தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…
தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…
தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…