ஆடு திருடிய வழக்கில் கைதானவருக்கு ‘அரசு வழக்கறிஞர்’ பதவி… திருப்பத்தூரில் வெடித்த நிஜ ‘சதுரங்க வேட்டை’…!

Spread the love

திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக் சுல்தான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காரில் வந்து ஆடுகளைத் திருடிச் சென்றதாக சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு வாணியம்பாடி போலீசாரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது இவருக்கே அரசு தரப்பு வழக்கறிஞர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் சட்டத்துறையினர் இடையே கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட அஞ்சலை (65) என்ற முதியவர், வாணியம்பாடி புதூர் ஏரிக்கரை பகுதியில் தனியாக வசித்து வருகிறார். கணவர் மற்றும் மகன்களை இழந்துவிட்ட நிலையில், தனது வாழ்வாதாரத்திற்காக ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். முன்பு இந்த வழக்கறிஞர் ஷேக் சுல்தானின் மாட்டுக்கொட்டகையை சுத்தம் செய்யும் வேலை செய்து வந்த அஞ்சலை, பின்னர் அந்த வேலையிலிருந்து நின்றுவிட்டார். இந்தச் சூழலில், கடந்த 2025 செப்டம்பர் மாதம் அஞ்சலையின் ஆடு ஒன்று காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் மூலம் வழக்கறிஞர் ஷேக் சுல்தான் தனது கூட்டாளியுடன் காரில் வந்து ஆட்டைத் திருடியது அம்பலமானது.

இச்சம்பவம் ஒருபுறமிருக்க, தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பதவிகளைப் பெறுவதற்கு ஆளுங்கட்சியின் வழக்கறிஞர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே, அரசு வழக்கறிஞர் நியமனங்களில் 5 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கைமாறுவதாக உட்கட்சி நிர்வாகிகள் சிலரே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊழலையும் லஞ்சத்தையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடர்ந்து முழங்கி வரும் வேளையில், இதுபோன்ற குற்றப் பின்னணி கொண்ட ஒருவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருப்பது அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தகுதியான நபர்களை ஆராய்ந்து நியமிக்காமல், முறைகேடான வழிகளில் பதவிகள் வழங்கப்படுகிறதா என்ற கேள்வியும், இத்தகைய நியமனம் சட்டத்தின் மீதான சாமானிய மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிடும் என்ற அச்சமும் தற்போது பரவலாக எழுந்துள்ளது.

SATHISH R

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

2 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

2 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

2 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

2 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago