தமிழக அரசு நிலம் வாங்குபவர்களுக்கு எளிதாக பட்டா மாறுதல் செய்யும் வகையில் மென்பொருளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை உட்பிரிவு இல்லாத சொத்துக்களை வாங்கும்போது, வில்லங்கங்கள் இல்லாமல் இருந்தால் மட்டுமே தானியங்கி முறையில் பட்டா மாறுதல் வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையில் இருந்த சில இடர்ப்பாடுகளைக் களைந்து, பொதுமக்கள் வட்டாட்சியர் அல்லது சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் வகையில் இந்த புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
புதிய மாற்றங்களின்படி, நிலத்தை விற்பனை செய்யும்போது உரிமையாளருடன் சேர்ந்து அவரது மனைவி, மகன் அல்லது மகள் போன்ற குடும்ப உறுப்பினர்கள் கையொப்பமிட்டாலும் இனி தானியங்கி பட்டா மாறுதல் சேவையைப் பயன்படுத்தலாம். அதேபோல், நில உரிமையாளர் பொது அதிகார பத்திர முகவர் மூலம் நிலத்தை விற்பனை செய்யும்போது பெயர் பொருத்தம் இல்லை என்றாலும், அது செல்லத்தக்க பொது அதிகாரம் என்பதால் இனி தானியங்கி பட்டா வழங்கப்படும். மேலும், வாங்குபவருக்கு அதே கிராமத்தில் ஏற்கனவே நிலம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், காலவிரயத்தைத் தவிர்க்கும் வகையில் தானாகவே அடுத்த புதிய பட்டா எண் ஒதுக்கப்படும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகளின்படி, மென்பொருள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த 15 நாட்களுக்குள் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் பெரும்பாலான உட்பிரிவு அல்லாத நிலங்களுக்கு, பொதுமக்கள் எங்கும் நேரில் செல்லத் தேவையின்றி தானியங்கி முறையிலேயே பட்டா மாறுதல் எளிதாகக் கிடைக்கும்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…