பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள கர்ஹாரா கிராமத்தைச் சேர்ந்தவர் விஷால் குமார். இவரது தாயாரின் பெயரில் 9 கட்டா நிலம் இருந்தது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தாய், தான் இறப்பதற்குள் அந்த நிலத்தை தனது ஒரே மகனான விஷாலின் பெயருக்கு மாற்ற தஹ்சீல் அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது அங்கு இருந்த ஒரு இடைத்தரகர், நிலத்தை மகனின் பெயருக்கு மாற்றுவதை விட மருமகள் அல்லது மகளின் பெயருக்கு மாற்றினால் குறைந்த செலவிலேயே பதிவை முடித்துவிடலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்.
விஷாலுக்கு சகோதரிகள் யாரும் இல்லாத காரணத்தால், அந்த இடைத்தரகரின் பேச்சை நம்பி தாய் நிலத்தை தனது மருமகளின் பெயருக்கே பதிவு செய்து கொடுத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக, நிலம் மருமகளின் பெயருக்கு மாற்றப்பட்ட மறுநாளே, அவர் விஷாலின் தம்பியுடன் வீட்டை விட்டு ஓடிப்போனார்.
தான் ஏமாற்றப்பட்டதையும், நிலத்தையும் மனைவியையும் ஒரே நேரத்தில் இழந்ததையும் அறிந்த விஷால் குமார் பெரும் அதிர்ச்சியடைந்தார். தற்போது தனக்கு நேர்ந்த இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனது நிலத்தை மீண்டும் மீட்கக் கோரியும் அவர் அரசு அதிகாரிகளின் அலுவலகங்களுக்குத் தொடர்ச்சியாக அலைந்து திரிந்து வருகிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஏக் மூர்த்தி சௌக் அருகே, அதிகாலை நேரத்தில் சாலையைக் கடக்க…
பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக்…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி…
செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ராஜாராம் நகர் சொசைட்டியில் உள்ள என்.ஆர்.ஐ ஒருவரின் பூட்டிய வீட்டிற்குள், நள்ளிரவில் திருடன் ஒருவன்…