செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை உணர்த்தும் நடுக்கமூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேடான சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த கனரக லாரி ஒன்று, ஏற்றத்தைக் கடக்க முடியாமல் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து பின்புறமாக அதிவேகத்தில் பாய்ந்து வரத் தொடங்கியது. அப்போது அந்த லாரிக்கு மிக அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர், லாரி பின்னோக்கி வருவதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.
நொடிப் பொழுதில் லாரியின் விபத்து வளையத்திற்குள் சிக்கிய அவர், சாதுரியமாகத் தன் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு அலறியடித்துப் பக்கவாட்டில் குதித்து உயிர் தப்பினார். கண்முன்னே அவரது இருசக்கர வாகனம் லாரியின் சக்கரங்களில் சிக்கிச் சல்லடையாக நொறுங்கியது. “மேடான சாலைகளில் முன்னே செல்லும் பெரிய வாகனங்களுக்குப் பின்னால் பாதுகாப்பான இடைவெளி விட்டுப் பயணிக்க வேண்டும்” என்றும், “அவசர காலத்தில் வாகனத்தை விட உயிரே முக்கியம்” என்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஏக் மூர்த்தி சௌக் அருகே, அதிகாலை நேரத்தில் சாலையைக் கடக்க…
பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக்…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி…
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ராஜாராம் நகர் சொசைட்டியில் உள்ள என்.ஆர்.ஐ ஒருவரின் பூட்டிய வீட்டிற்குள், நள்ளிரவில் திருடன் ஒருவன்…
கஜகஸ்தான் நாட்டில் தாயின் மீதான பாசத்தையும், பிஞ்சு குழந்தைகளின் முதிர்ச்சியையும் உணர்த்தும் வகையில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணையவாசிகளின்…