பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக் கூட இல்லாமல் நின்றுகொண்டு கடலை மற்றும் பொரி விற்றுத் தன் பிழைப்பைப் பார்த்து வந்த ஏழை வியாபாரி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஷ்டப்பட்டு உழைத்து, யாரையும் கையேந்தி நிற்காமல் சுயமரியாதையோடு பிழைப்பு நடத்தி வந்த அந்த ஏழை முதியவரின் வியாபாரக் கூடையை, அங்கே வந்த ரவுடி ஒருவன் மிருகத்தனமாக எட்டி உதைத்து, தானியங்கள் முழுவதையும் சாலையில் கொட்டி நாசம் செய்துள்ளான். தன் வாழ்வாதாரமே வீதியில் சிதறிக் கிடப்பதைக் கண்டு அந்த ஏழை வியாபாரி கண்ணீர் விட்டு அழுது துடித்த காட்சி காண்போரின் நெஞ்சைப் பிழிவதாக அமைந்தது.
இந்தக் கொடூரச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியதை அடுத்து, “ஏழையின் வயிற்றில் அடித்த இந்த ரவுடியை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்றும், “பாதிக்கப்பட்ட வியாபாரிக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்” என்றும் பாட்னா போலிஸுக்கு நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, வீடியோவை ஆதாரமாகக் கொண்டு பாட்னா போலிஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அந்த அராஜக நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசனைத் தொகுத்து வழங்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சமீபத்திய எபிசோட் ஒன்றில் போட்டியாளர்…
'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே' மற்றும் 'நந்தன்' ஆகிய கவனத்தை ஈர்த்த திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் இரா.சரவணன், தனது மாமனாருக்கு ஏற்பட்ட…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகா ஹுனசேகட்டே கிராமத்தைச் சேர்ந்த தர்ஷன் (25) மற்றும் உஷாராணி (21) ஆகிய…
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் கொத்வாலி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பஹ்லிம்பூரா கிராமத்தில், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுப் பேரன் ஒருவன்…
தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டம் கொத்தபள்ளி பகுதியில், வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் மூக்கைக்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஏக் மூர்த்தி சௌக் அருகே, அதிகாலை நேரத்தில் சாலையைக் கடக்க…