“புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…” பொறி விற்று பிழைத்த ஏழை… அடித்து தூக்கி எறிந்து அராஜகம் செய்த ரவுடி…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!

Spread the love

பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக் கூட இல்லாமல் நின்றுகொண்டு கடலை மற்றும் பொரி விற்றுத் தன் பிழைப்பைப் பார்த்து வந்த ஏழை வியாபாரி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஷ்டப்பட்டு உழைத்து, யாரையும் கையேந்தி நிற்காமல் சுயமரியாதையோடு பிழைப்பு நடத்தி வந்த அந்த ஏழை முதியவரின் வியாபாரக் கூடையை, அங்கே வந்த ரவுடி ஒருவன் மிருகத்தனமாக எட்டி உதைத்து, தானியங்கள் முழுவதையும் சாலையில் கொட்டி நாசம் செய்துள்ளான். தன் வாழ்வாதாரமே வீதியில் சிதறிக் கிடப்பதைக் கண்டு அந்த ஏழை வியாபாரி கண்ணீர் விட்டு அழுது துடித்த காட்சி காண்போரின் நெஞ்சைப் பிழிவதாக அமைந்தது.

இந்தக் கொடூரச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியதை அடுத்து, “ஏழையின் வயிற்றில் அடித்த இந்த ரவுடியை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்றும், “பாதிக்கப்பட்ட வியாபாரிக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்” என்றும் பாட்னா போலிஸுக்கு நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, வீடியோவை ஆதாரமாகக் கொண்டு பாட்னா போலிஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அந்த அராஜக நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“திமுக ஆதரவாளர் மனைவி இப்படி சொல்லிட்டாங்களே…” ‘எனக்கு என்னமோ அப்படி தான் தோணுது…’ விஜய் சேதுபதி சர்ச்சை பேச்சு குறித்து அதிரடி பதிவு…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசனைத் தொகுத்து வழங்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சமீபத்திய எபிசோட் ஒன்றில் போட்டியாளர்…

7 minutes ago

“நீங்க இருக்கிறப்ப எனக்கென்னப்பா கவலை…” காலை இழந்தும் சிரித்துக்கொண்டே சொன்ன தந்தை நிகர் மாமனார்… பிரபல இயக்குனரின் வைரல் பதிவு…!!

'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே' மற்றும் 'நந்தன்' ஆகிய கவனத்தை ஈர்த்த திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் இரா.சரவணன், தனது மாமனாருக்கு ஏற்பட்ட…

17 minutes ago

“கல்யாணமாகி 45 நாட்கள்தான் ஆச்சு…” புதுமணத்தம்பதிக்கு நடந்த கொடூரம்…. கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகா ஹுனசேகட்டே கிராமத்தைச் சேர்ந்த தர்ஷன் (25) மற்றும் உஷாராணி (21) ஆகிய…

29 minutes ago

“பைக் வாங்கி தந்தோம்… இப்போ ஐபோன் கேட்குற…?” பாட்டி, அத்தையை மிருகத்தனமாக அடித்த பேரன்…. கதறிய பெண்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் கொத்வாலி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பஹ்லிம்பூரா கிராமத்தில், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுப் பேரன் ஒருவன்…

35 minutes ago

“வரதட்சணை கொடுமையால் அம்மா வீட்டிற்கு வந்த பெண்…! ஆத்திரத்தில் மூக்கை கிள்ளி ரத்த களறியாக்கிய கணவர்… மாமனார் வீட்டில் அராஜகம்…. பகீர் சம்பவம்..!!

தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டம் கொத்தபள்ளி பகுதியில், வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் மூக்கைக்…

53 minutes ago

“மின்னல் வேகத்தில் வந்து மோதிய கார்…” தூக்கி வீசப்பட்டு கை,கால், முதுகெலும்பு முறிந்து ரத்த வெள்ளத்தில் துடித்த நபர்…. நடுங்க வைக்கும் CCTV வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஏக் மூர்த்தி சௌக் அருகே, அதிகாலை நேரத்தில் சாலையைக் கடக்க…

1 மணத்தியாலம் ago