குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ராஜாராம் நகர் சொசைட்டியில் உள்ள என்.ஆர்.ஐ ஒருவரின் பூட்டிய வீட்டிற்குள், நள்ளிரவில் திருடன் ஒருவன் மர்மமான முறையில் புகுந்துள்ளான். வீட்டிற்குள் பொருட்களைத் தேடிய பிறகு, அங்கிருந்து தப்பியோட முயன்றபோது வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த இரும்பு ஜன்னல் கம்பிகளுக்கு இடையே நுழைய முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக, உடலின் பாதி பகுதி கம்பிக்குள்ளும் பாதி பகுதி வெளியேயும் மாட்டித் தப்பியோட முடியாமல் “அங்கிட்டும் போக முடியாமல், இங்கிட்டும் வர முடியாமல்” மாட்டிக்கொண்டு தவித்தார்.
விடியற்காலையில் ஜன்னல் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த திருடனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாகக் கம்புகள் மற்றும் கற்களை எடுத்து தர்ம அடி கொடுத்துக் வெளுத்து வாங்கினர். இந்த நகைச்சுவையான மற்றும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நல்லவேளையாக வீட்டில் இருந்த பொருட்கள் எதுவும் திருடுபோகவில்லை என வீட்டின் உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஏக் மூர்த்தி சௌக் அருகே, அதிகாலை நேரத்தில் சாலையைக் கடக்க…
பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக்…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி…
செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…
கஜகஸ்தான் நாட்டில் தாயின் மீதான பாசத்தையும், பிஞ்சு குழந்தைகளின் முதிர்ச்சியையும் உணர்த்தும் வகையில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணையவாசிகளின்…