“அங்கிட்டும் போக முடியாம… இங்கிட்டும் வர முடியாம…” ஜன்னல் கம்பிக்குள் சிக்கிய பலே திருடன்…! கம்புகளாலும் கற்களாலும் வீசியடித்த பொதுமக்கள்…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 16, 2026

Spread the love

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ராஜாராம் நகர் சொசைட்டியில் உள்ள என்.ஆர்.ஐ ஒருவரின் பூட்டிய வீட்டிற்குள், நள்ளிரவில் திருடன் ஒருவன் மர்மமான முறையில் புகுந்துள்ளான். வீட்டிற்குள் பொருட்களைத் தேடிய பிறகு, அங்கிருந்து தப்பியோட முயன்றபோது வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த இரும்பு ஜன்னல் கம்பிகளுக்கு இடையே நுழைய முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக, உடலின் பாதி பகுதி கம்பிக்குள்ளும் பாதி பகுதி வெளியேயும் மாட்டித் தப்பியோட முடியாமல் “அங்கிட்டும் போக முடியாமல், இங்கிட்டும் வர முடியாமல்” மாட்டிக்கொண்டு தவித்தார்.

விடியற்காலையில் ஜன்னல் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த திருடனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாகக் கம்புகள் மற்றும் கற்களை எடுத்து தர்ம அடி கொடுத்துக் வெளுத்து வாங்கினர். இந்த நகைச்சுவையான மற்றும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நல்லவேளையாக வீட்டில் இருந்த பொருட்கள் எதுவும் திருடுபோகவில்லை என வீட்டின் உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.