பெங்களூரு அருகே உள்ள தொட்டபிடரகல்லு பகுதியில் அதிகாலை வேளையில் அதிர்ச்சி தரும் துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. காலை 5 மணியளவில் ஜெயம்மா என்ற பெண் வழக்கம்போல் நடைபயிற்சிக்குச் சென்றுள்ளார். அப்போது அவரை நோட்டமிட்ட சங்கிலி பறிக்கும் கொள்ளையர்கள், அவரை அமைதியாகப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
ஆள்நடமாட்டமற்ற ஒரு தனிமையான பகுதியில், ஜெயம்மாவை பின்னால் இருந்து கொடூரமாகத் தாக்கிய கொள்ளையன், அவரை கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளான். சங்கிலியைப் பறித்த கையோடு, தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் கொள்ளையர்கள் அதிவேகமாகத் தப்பிச் சென்றுவிட்டனர்.
https://twitter.com/RTVnewsnetwork/status/2087929671656911089/video/1
இந்தக் கொடூரமான தாக்குதல் மற்றும் சங்கிலி பறிப்புச் சம்பவத்தின் அனைத்துக் காட்சிகளும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜெயம்மா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ராஜாராம் நகர் சொசைட்டியில் உள்ள என்.ஆர்.ஐ ஒருவரின் பூட்டிய வீட்டிற்குள், நள்ளிரவில் திருடன் ஒருவன்…
கஜகஸ்தான் நாட்டில் தாயின் மீதான பாசத்தையும், பிஞ்சு குழந்தைகளின் முதிர்ச்சியையும் உணர்த்தும் வகையில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணையவாசிகளின்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பிரபல 'கௌர் சித்தார்தம் சொசைட்டி' குடியிருப்பில் 15-வது மாடியில் இருந்து குதித்து 16…
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செரையம்பாளையம் பகுதியில், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவையைத் தமிழக…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பந்த்லகுடா பகுதியில் உள்ள ஒயின் ஷாப் அருகே 34 வயதான முகமது நயீம் என்ற ரியல்…